கவிப்புயல் இனியவன் கஸல் 630 - 650

கேட்கும் ஓசையெல்லாம் 
நீ பேசும் பேச்சாய் உணர்கிறேன் 
ஏனடி இப்போ மௌன காதல் 
செய்கிறாய் ....? 

வண்டு வருவது பூவுக்கு 
தெரியும் 
வாடிய பூவில் தேனில்லை 
என்று வண்டுக்கு தெரியாது 

எழுதிய கருவிகள் கூட 
காதலிக்க 
தொடங்கி விட்டான 
உனக்கேன் இன்னும் 
காதல் வரவில்லை ...? 

கஸல் கவிதை 631

----

தாமரை இலை நீ 
காதல் தடாகம் நான் 
தாமரை இலையில் 
தண்ணீர் நம் காதல் ...!!!

சமுத்திர ஆழம் காதல் 
சமுத்திர கப்பல் நாம் 
ஓட்டை விழுந்த படகில் 
பயணம் செய்கிறோம் ...!!!

எறும்பு ஊர கற்குழியும் 
என் நினைவுகள் ஏற
ஏன் உனக்கு காதல் 
வரவில்லை ...!!!

கஸல் 632

-----

இதயமும் இதயமும் 
சேர்ந்தால் காதல் 
உன் கணக்கில் 
பிழைக்கிறதே...???

பன்னீரால் காதலிக்கிறேன் 
கண்ணீரால் விடைதருகிராய் 
காதல் நீரும் நெருப்பும் 

கண்ணிலே தோன்றி 
இதயத்தில் முடியும் 
காதல் -எப்படி ..?
கண்ணீரால் முடிந்தது ...??

கஸல் 633

-----

அன்பை தந்தேன் 
காதலை தந்தாய் 
தண்ட வாளத்தில் 
காதல் பயணம் ....!!!

காதல் சுவர் நீ 
காதல் படம் நான் 
தூசி பிடிக்கிறது காதல் 

நினைவில் கோலம் 
போட்டேன் -கனவில் 
புள்ளி போட்டேன் 
கண்ணீர் கோலத்தை 
அழிக்கிறது ....!!!

கஸல் 634

--------
உன்னை நினைக்காத நேரம் 
நான் இறந்த நேரம் 
வா ,,,இருவரும் 
நினைவால் இறப்போம் ...!!!

கணணி திரையில் உன் 
முகம் நிலையாக இருக்க 
மனத்திரையில் அசையும் 
படமாகும் ....!!!

இதயத்தில் 
இரத்தோட்டம் நீ 
எனக்கோ இரத்த சோகை...!!! 

கஸல் 635
----------
நான் காதல் நிலவு 
நீ காதல் ஒளி
காதல் வானம் 
தரையில் நின்று 
தவிக்கிறது ....!!!

தூரத்தில் இருந்தால் 
தாகம் -நீ 
கிட்டே வந்தால் 
மோகம் 
காதல் தனியே 
அழுகிறது ....!!!

நிலவே 
என்று அழைக்கிறேன் 
எரிகிறாய் 
மலரே என்று அழைக்கிறேன் 
குற்றுகிறாய் 

கஸல் 636

-------------

நான் காதல் நாயகன் 
நீ காதல் நாயகி 
இருவருக்கும் இடையில் 
காதல் இல்லை 

காதல் வந்தால் 
சாதனை வரும் 
உன்னை காதலித்தேன் 
சாதனைக்கு பதில் 
சா- வருகிறது

தொலைந்தால் தேடலாம் 
தொலைந்ததே நான் 
எப்படி தேடுவேன் ...?

கஸல் 637

------

உனக்கு நானும் 
எனக்கு நீயும் 
இறைவன் போட்ட 
முடிச்சு -நீ 
காதல் முடிச்சை 
கழட்டுகிறாய் ...!!!

காதலுக்கு முத்தம் 
அடையாள சின்னம் 
நீ ஏன் முத்தம் கேட்கிறாய் 
இறந்த காதலை 
வைத்துக்கொண்டு ....?

ஒற்றை இதயத்தால் 
காதல் மலரும் 
இரட்டை இதயத்தால் 
காதல் வளரும் 
என் இதயம் களவு 
போய்விட்டது ....!!!

கஸல் 638

----------

இதயத்தில் நீ 
இருப்பதால் தான் 
நான் இருக்கிறேன் 
நீ ஏன் இறந்து 
கிடக்கிறாய் ...?

நிலாவில் காதல் 
செய்தோம் 
சூரியனாய் 
எரிக்கிறது காதல் 

உன் பிரிவு 
என்னை வாட்டுகிறது 
நீ வேதாந்தம் கதைக்கிறாய் 

கஸல் 639

----------

குற்றிய முள் கூட 
என்னை கட்டி 
அணைக்கிறது 
நீ பூவாக இருந்து 
குற்று கிறாய் ....!!!

என் கவிதையில் 
நீ தான் முதல் 
எழுத்தாய் இருந்தாய் 
இப்போ கடைசி எழுத்து 
நீ தான் ....!!!

கை கோர்த்து 
நடந்தேன் -இப்போ 
கை இழந்து நிற்கிறேன் 

கஸல் 640

----------

முகத்தில் ரோஜாவையும் 
இதயத்தில் முள்ளையும்
வைத்து காதலிக்கிறாய் 
நான் ரசிக்கிறேன் ....!!!

காதல் ஒரு தேன்கூடு 
நீ அதை கல்லால் எறிந்து
கலைக்கிறாய் -நான் 
தடுக்கிறேன் ....!!!

தாகத்தின் உச்சத்தில் 
தண்ணீர் கேட்கிறேன் 
நீயோ காதல் குடத்தை 
மூடுகிறாய் ....!!!

கஸல் 641

----------

காதல் வெற்றியில் உனக்கு 
காதல் மோதிரம் மாற்றினேன் 
அன்றே என் காதலும் 
கைமாறி விட்டதே ....!!!

காதல் ஒரு இரு சக்கரம் 
நீ அடம் பிடிக்கிறாய் 
நான் வெளியேறுவேன் 
நீ தனியாக செல் சென்று 
நான் தயார் உயிரே ...!!!

நிலாவை பார்த்து 
சோறு ஊட்டினால் அன்னை 
நீ நிலாவை காட்டி 
கண்ணீர் தருகிறாய் ...!!!

கஸல் 642

-----

கையளவு இதயத்தை 
தந்து கடலளவு நினைவுகள் 
காதலில் வரும் -நீ 
கடுகளவுகூட தரவில்லை ....!!!

நான் உன்னை 
காதலி -தேன்
இனிக்கும் என்றுதானே 
ஏனடி கசக்கிறாய் ...?

இரண்டு சிறகுகளால் 
பறந்து சென்றேன் 
நீ அருகில் இருக்கும் போது
சிறகை உடைத்து ஏன்
சென்றாய் ...?

கஸல் 643

----------

எல்லோரையும் பார்த்து 
இரங்கும் குணம் -என்னை 
பார்த்து ஏன் இரங்கவில்லை
காதல் உனக்கு கல்லறை 
பூவோ ...?

உள் மூச்சாக இருந்த 
உன் சுவாசம் இப்போ 
வெளிமூச்சாக மாறி 
வருகிறது - நீ வெளியேறு 
நான் காத்திருப்பேன் 

காதல் சூரியன் போல் 
தூரத்தில் நின்றால் சுகம் 
நான் தூரத்தில் நின்று 
சுகத்தை தொலைத்து 
விட்டேன் ....!!!

கஸல் 644

---------

என் இதயத்தில் நீ 
நடந்து செல்வாய் 
என்றிருந்தேன் 
உதைத்து 
விளையாடுகிறாய் 
நான் சுமையாக 
நினைக்கவில்லை ....!!!

காதல் இதயத்தில் 
வரவேண்டும் 
உனக்கு வார்த்தையில் 
மட்டும் வந்தது ....!!!

உன்னை நிலாவோடு 
ஒப்பிடுகிறேன் -நீ 
நெருப்பாக இருக்கும் 
போதே ....!!!

கஸல் 645

----------

காதல் கப்பலில் 
கைகோர்த்து சென்றோம் 
கப்பல் கவிழ்ந்தது 
காகித காதல் கப்பல் ....!!!

நிலவே 
உன்னை தொடுவேன் 
தொட்டால் விடமாட்டேன் 
நீ ஏன் தரையில் இருக்கிறாய் 

என் 
பாழடைந்த இதயத்தில் 
நீ இரத்த அழுத்தம் 
இதயத்தில் இரத்தத்தை 
குடித்து விட்டாய் ....!!!

கஸல் 646

-------------

கல்லையும் கல்லலையும்
தேய்த்தால் நெருப்பு வரணும் 
நீயும் நானும் சேர்ந்தால் 
காதல் வரணும் -வந்தது 
வலியுடன் ....!!!

பூக்கின்ற பூவுக்கு 
தெரிவதில்லை 
வாடுவேன் என்று 
நம் காதலும் அது 
போல் தான் ஆயிற்று 

உனக்கும் எனக்கும் 
அடையாளம் வேண்டும் 
காதலில் பிரிந்த 
அடையாளம் இருக்கு ...!!!

கஸல் 647

----------

நானும் நீயும் பயணித்த 
இருக்கையில் ஒற்றை 
இருக்காய் கண்ணீர் 
வடிக்கிறது ....!!!

இருவரும் ஒன்றாக 
இருந்த நிழல் குடை 
இப்போ யாரையோ 
வைத்திருக்கிறது ....!!!

நீ 
எதுக்கு எடுத்தாலும் 
அழுகிறாய் 
இதயத்தை தொலைத்த 
நான் அழவில்லை ....!!!

கஸல் 648

------------

தேடி பார்க்கிறேன் 
உன்னையும் 
என்னையும் கிடைத்தது 
நம் உடல் -காதல் 
காணாமல் போய் 
விட்டது .....!!!

வானுயந்த மரமாய் 
வளர்ந்த காதல் 
பூப்போல் வாடிவிட்டது 

காதில் காதலை 
சொன்னேன் -நீ 
இதயத்துக்குள் 
காதலை கடத்தவில்லை ....!!!

கஸல் 649

-----------

வரலாற்று காதலாய் 
வரவேண்டிய நம் காதல் 
வார இறுதியில் முடிந்து 
விட்டதடி .....!!!

காற்றடிக்கும் திசையில் 
பட்டம் தான் மாறனும் 
காதல் எப்படி மாற்றினாய் ..?

காதலில் நான் மூச்சு 
உன்னை காற்றாய் 
இழுக்க விரும்பினேன் 
மூச்சு திணறுகிறேன் 
காற்றில்லாமல் ....!!!

கஸல் 650

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கஜல் கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்

கஸல் கவிதை பற்றிய சிறு விளக்கம்

சமுதாய முன்னேற்றம்