கவிப்புயல் இனியவன் கஸல் 700 - 710

உன் நினைவுகளால் 
தேன் கூடு கட்டுகிறேன் 
நீ நெருப்பு மூட்டி 
கலைக்கிறாய் .....!!!

காதல் முத்து தான் 
விளைந்தால் மட்டும் 
விளைய மாட்டேன் 
என்கிறது -நம் காதல் ...!!!

உயிரும் உடலுமாய் 
இருந்த காதல் 
உடலும் நிழலுமாய் 
மாறிவிட்டது ....!!!


கஸல் 701

------

காதலில் நீ முறைத்து 
பார்த்ததால் தான் -நம் 
காதல் எரிந்தே போய் 
விட்டது ......!!!

காதல் மன்மதனை 
வணங்கு -ஏன்
இயமனை 
வணங்கினாய் ...!!!

உன்னை 
காதலித்ததால் 
கழுகு மரத்தில் ஏற்ற 
படுகிறேன் .....!!!

கஸல் 702

-----

உன் காந்த கண்கள் 
என் இரும்பு இதயம் 
ஈர்ப்பு தத்துவம் 
சாம்பலாகியது ....!!!

கண் தானம் காதல் 
காதல் தானம் 
செய்துவிட்டேன் 
எங்கிருந்தாலும் வாழ்க ....!!!

பள்ளியறையில் காதல் 
தூங்கனும் - நாம் 
தூங்குகிறோம் 
கல்லறையில் ....!!!

கஸல் 703

----

காதல் 
வானில் சிறகடித்து ...
பறக்கிறாய் நான் ....
அவசர சிகிச்சையில்..
அனுமதிக்க ....
பட்டிருக்கிறேன் .....!!!

காதலோடு வந்து 
காதலோடு வாழ்ந்து 
காதல் இல்லாமல் 
இருக்கிறேன் .....!!!

திருமணத்துக்கு தாலி 
காதலுக்கு ஏது வேலி 
வேலியே பயிரை மேய்ந்து 
விட்டது .....!!!

கஸல் 704

----
உன் நினைவுகளை 
எடுத்து விடு -காதல் 
அழுகிறது .....!!!

நீ என்னை வெறுக்கிறாய் 
என் இதயம் உன்னை 
விரும்பி கொண்டு
துடிக்கிறது ....!!!

என் கவிதைகள் 
அழகாக இருக்கிறது 
நண்பர்கள் சொல்கிறார்கள் 
நீ வலி தருவது அவர்களுக்கு 
எப்படி தெரியும் ...?

கஸல் 705
----
என் கவிதைகள் நீ 
தந்த காயங்களில் இருந்து 
வரும் கருப்பு வரிகள் ...!!!

உன்னை காதலிக்க 
வேண்டும் என்றால் 
என் மூளை இறக்க 
வேண்டும் .........!!!

உன் மூச்சு காற்றுக்கு
அஞ்சி நான் காற்று 
இல்லா கிரகத்துக்கு 
செல்கிறேன் .....!!!

கஸல் 706
----
சிரிப்பை தந்து காதல் 
தந்தாய் -இப்போ 
வெறுப்பை பூக்குறாய்
என் காதல் பூ 
வாடவில்லை ...!!!

இப்போ உன்னிடம் 
கனவில் கெஞ்சுகிறேன் 
உன் முகத்தை காட்டு ...!!!

நீ 
என்னை பார்க்காத வரை 
நான் கண் இருந்தும் பார்வை 
அற்றவன் ....!!!

கஸல் 707
----
காதல் காற்றாடி நாம் 
காற்றாடி விழுகிறது 
நூல் என் கையில்...!!!

உன் கண் உனக்கு 
கவர்ச்சி எனக்கு 
அதிர்ச்சி .....!!!

உன்னை 
நான் காதலித்த போதே
மயானத்துக்கு சென்று 
வருகிறேன் ....!!!
கஸல் 708
------
கண்ணால் ஏறுவரிசையில் 
இருந்த நம் காதல் 
கண்ணீரால் இறங்கு வரிசை 
ஆகிறது .....!!!
என் 
கையில் ஆயுள் ரேகை -நீ 
ஆழமாக்குவதும்
அழிப்பதும் -நீ 
நான் 
எழுதுவது உனக்கு 
கவிதை -எனக்கு 
வாழ்க்கை ...
வலிக்குதடி உயிரே ...!!!

கஸல் 710

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கஜல் கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்

கஸல் கவிதை பற்றிய சிறு விளக்கம்

சமுதாய முன்னேற்றம்