கவிப்புயல் இனியவன் கஸல் 710 - 720

நீ 
வேறு பாதையால் வா 
நான் 
வேறு பாதையால் 
வருகிறேன் - முடிவு 
காதல் சந்தியில் 
சந்திப்போம் ............!!!

உன் 
கண்ணீர் எனக்கு 
இன்பம் தான் -நீ 
என்னை நினைத்து 
வடிக்கும் ஆனந்த மழை ....!!!

உனக்காக 
தான் தனிமையை 
விரும்புகிறேன் - அங்கே 
உன் வலிகள் இருக்காது 
என்பதற்காக .......!!!

கஸல் 711

****

உன்னை காதலிக்கும் 
போது வலியையும்
காதலித்து விட்டேன் ....!!!

என் இதயம் முழுவதும் 
உன் நினைவுகளின் 
ராஜ்ஜியம் -காதல் 
பூச்சியமாகி விட்டது ...!!!

எனக்கு இசை பிடிக்கும் 
இப்போ விரும்பி கேட்கிறேன் 
சங்கின் ஊதும் ஓசை ....!!!

கஸல் 712

-----

உன் 
இதயம் ஓட்டை பானை 
அதில் நான் காதல் நீர் 
நிரப்புகிறேன் ....!!!


என் 
காதல் தோல்விக்கு 
நானே காரணம் அதிகம் 
நேசித்து விட்டேன் ...!!!

நான் 
இருவழி பாதை 
நீ ஒரு 
வழியால் வருகிறாய் 
காதல் சந்தி மூடப்பட்டுள்ளது ..!!!


கஸல் 713

____

காதல் ஒரு வட்டம் 
அதுதான் நம் காதல் 
பூச்சியமாகி விட்டது ...!!!

நீ 
எனக்காக படைக்கபட்டவள் 
நான் 
உனக்காக அழுவதற்கு 
பிறந்தவன் ....!!!

நிலவென காதலித்தேன் 
சந்திர கிரகணமாகி 
நம் காதல் .....!!!


கஸல் 714

____

நீர் 
மேல் குமிழிபோல் 
நம் காதல் அழகானது 
ஏழு நிறங்கள் குமிழியில் 
ஏழு குணம் உன் காதலில் ....!!!

என் 
காதல் விளக்கில் 
வெளிச்சம் நான் 
புகை நீ ....!!!

என் 
மூச்சே காதல் ....
வா உயிரே பறந்து ....
திரிவோம் காதல் .....
காற்றாடியாக - நீ 
காற்றாடியின் நூல் 
நீ ஆட்டும் திசையெல்லாம் 
ஆடுகிறேன் ....!!!

கஸல் 715


----

உயிரே 
என்று அழைத்தேன் 
தண்டனை 
உயிரே வலிக்குதடி ,,,!!!

உன்னை 
பார்த்துதான் 
காதல் வந்ததும் 
காதல் போனதும் 
காதலின் ஆதியும் 
அந்தமும் நீயோ ,,,!!!

கானல் 
நீரை பார்த்திருக்கிறேன் 
காதல் கானல் நீராய் 
காதல் மாறியது இப்போ 
என் காதலில் பார்த்தேன் ...!!!

கஸல் 716

-----

காதலில் கரும்பாக 
இருந்த - நீ 
இரும்பாக மாறி விட்டாய் ...!!!

விழிகளில் பார்வையாக 
இருந்தேன் -இப்போ 
விழுகிறேன் கண்ணீராய் ...!!!

கண்களால் 
கைது செய்தேன் 
கண்ணீரால் உன்னை 
விடுவிக்கிறேன் ...!!!

கஸல் 717

----

வெற்றிக்கும் தோல்விக்கும் 
அர்த்தம் புரிந்தது 
உன் வரவிலும் பிரிவிலும் ...!!!

காதல் 
உயிரால் வரவேண்டும் 
உனக்கு உடலால் வந்து 
என்னை கொல்லுது ...!!!

நினைத்த நொடியில் 
உன் நினைவே வரணும் 
வருகிறது நீ சொன்ன 
வலியான வார்த்தை ...!!!

கஸல் 718

-----

உன் 
அழகில் மயங்கினேன் 
அழுதுகொண்டு 
இருக்கிறேன் ...!!!

இதயத்தில் இரு 
இருதய நோயாளி 
ஆக்கிவிடாதே ....!!!

காதலுக்கு வார்த்தை 
அமிர்தம் உயிரே ..
எனக்கு வெட்டும் வாள் 
ஆக்கிவிட்டாய் -நீ 

கஸல் 719

-----

காத்திருந்து கேட்டேன் 
காதல் வார்த்தையை 
இல்லை ...
காதல் வலியின் 
வார்த்தையை ......!!!

காதல் இரட்டை பாதை 
ஒற்றையடி பாதையாக்கி 
நீ மட்டும் போகிறாய் ....!!!

தொலைபேசி அழைப்பு 
எல்லோருக்கும் அழைப்பு 
எனக்கு ஏக்கம் -இதுவே 
பிழைப்பாகி விட்டது ...!!!

கஸல் 720

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கஜல் கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்

கஸல் கவிதை பற்றிய சிறு விளக்கம்

சமுதாய முன்னேற்றம்