கவிப்புயல் இனியவன் கஸல் 580 - 600

நான் உன்னை விட்டு 
பிரிந்து பல மாதங்கள் 
நீ என்னை விட்டு 
எப்போது பிரிவாய்....?

தூறல் மழையில் 
நனைந்தால் 
தும்மல் வருவதுபோல் 
உன் காதல் மழையில் 
நனைந்தேன் 
தும்மலாய் நீ 

துளசியாக இருந்த நீ 
எந்த வாசனையும் 
இல்லாத கடதாசிபூவாக 
ஏன் மாறினாய் ....?

கஸல் ;581

-----

காதலை 
வரைய சொல்லுகிறாய் 
முதலில் என்னை காதலி 
உணர்வையே வரைகிறேன் ...!!!

நீ தந்த வலியை
என்னை விட்டு இறக்க 
நான் இறக்கவேண்டும் 

கண்ணீரில் வரும் 
தண்ணீர் நீ தந்த 
வார்த்தைகள் 
திரவம் ......!!!

கஸல் ;582

-----

ரோஜாபோல் உன் அழகு 
முள் போல் வார்த்தை 
காதல் மட்டும் இனிமை 

கண்ணில் விழுந்தேன் 
கண்ணீரில் வாழுகிறேன் 

நான் விளக்கு 
நீ காற்று 
சுடரை அசைக்காதே 
என்கிறாய் எப்படி ..?

கஸல் 583

------

மதுவை விட மாது 
கொடியது ....!!!
உன் கண்ணல்ல 
தேள் .....!!!

காதல் வலியால்
மூச்சு விடுகிறேன் 
நீயோ மூச்சு 
காற்றில் பட்டம் 
விடுகிறாய் ....!!!

குற்றத்துக்கு 
மன்னிப்பு உண்டு 
குற்றத்தை தோற்று 
வித்தவனுக்கு 
தண்டனையே உண்டு ....!!!

கஸல் 584

----

நம் காதல் கடல் போல் 
ஆழமானது 
காதல் வலி 
வானம் போல் 
எல்லையில்லாதது ....!!!

தப்பாக புரிந்து கொண்டேன் 
நிலா போல் நீயும் 
குளிர்மையானவள் என்று ...!!!

என் பிறந்த நாள் 
நீ என்னை காதலித்த நாள் 
என் இறந்த நாள் 
நீ என்னை பிரிந்த நாள் ....!!!

கஸல் 585

------

இதயத்தில் இருந்த நீ 
இ ப்போது கண்ணில் 
கண்ணீராய் ....!!!

கவலைப்படாமல் 
காதல் செய்தேன் 
சிறையில் 
அடைக்கப்பாட்டேன் ....!!!

எந்த சட்டத்தாலும் 
தடைசெய்யமுடியாத 
உன் போதை பார்வையால் 
அடிமையாகி விட்டேன் 
நீ தொடர்ந்து போதையை 
விற்ற்கிறாய் ....!!!

என் கஸல் தொடர் ;586

-----

இதயத்தை உனக்கு தந்தேன் 
நீ திருப்பி தருகிறாய் 
காதல் விதி 
தெரியாதவள் ...!!!

காதலில் கவிதை 
எழுதினேன் -இப்போ 
காதல் அகராதி 
தோன்றி விட்டது 
காதல் வலி அதிகம் ....!!!

நீ எதை கேட்டாலும் 
தந்திருப்பேன் 
செய்த காதலை 
கேட்கிறாயே ....!!!

என் கஸல் தொடர் ;587

-----

காதலுக்கு வலி உண்டு 
அதிலும் நீ தரும் வலி 
சக்தி மிக்கது 
தாங்கி பழகிவிட்டேன் ....!!!

இருப்பத்தற்கு இரு 
இடம் தேவை போல் 
இதயத்தில் 
வந்திருக்கிறாய் 
காதலை எப்போது 
தருவாய் ....?

நான் கடிதம் எழுதுகிறேன் 
நீ தபால் உறையிட்டு 
அனுப்புகிறாய் .....!!!

என் கஸல் தொடர் ; 588

-----

கண்களை தானம் 
செய்து விட்டு காதல் 
செய்திருக்கலாம் 
கண்ணீரால் வெந்திராது
கண் ......................!!!

நான் எப்போது காதல் 
செய்தேனோ 
அப்போதே இறக்கவும் 
தொடங்கிவிட்டேன் 

யாருக்கு யார் 
என்பதை இறைவன் 
சொல்லியிருந்தால் 
உன்னை நான் 
விலத்தியிருப்பேன் 

என் கஸல் தொடர் 589
 ----

தெய்வம் என்றுதான் 
வணங்கினேன் 
தெய்வமாக்கி 
விட்டாய் என்னை ...!!!

காதல் என்றால் 
தரிசிக்க வேண்டும் 
தரிசித்தால் வரம் 
கிடைக்க வேண்டும் 
கிடைத்தது வலி 

நிலாவை உவமையாக 
சொன்னேன் அதுதான் 
தூரமாகி விட்டாய் ....!!!

என் கஸல் தொடர் ;590

------

தாமரை இலையில் நீர் 
போல் அங்கும் இங்கும் 
ஆடுகிறது நம் காதல் 

என் இதயக்கதவு 
திறந்தே உள்ளது 
விரும்பினால் வா ...!!!

நான் அழுத கண்ணீர் 
உனக்கு பன்னீராக 
இருக்கிறது -என் 
வலியை உணராமல் 
இருக்கிறாய் ....!!!

என் கஸல் தொடர் ;591
----------

 

காதலின் சின்னம் நீ 
காதல் வலியின் 
சின்னமும் நீ 
காதல் கதறுகிறது ....!!!

என் ஒவ்வொரு பெரு
மூச்சும் எந்தளவு வலி 
என்பதை நீ 
உணராமல் இல்லை ....!!!

காதல் சொன்ன போது 
கண்ணீர் வந்தது 
இப்போதும் கண்ணீர்
வருகிறது வேறுபாடு 
உனக்கு தெரியும் ....!!!

என் கஸல் தொடர் ;592
-----------

என்னை கண்டு ஓடி 
வருபவள் இப்போதும் 
அதையே செய்கிறாள் 
எதிர் மறையாக ....!!!

உன் முகத்தில் பூ 
என் முகத்தில் முள் 
இரண்டுமே 
உதிரதொடங்கி விட்டது 

கண்ணீரில் காதல் 
விளக்கு ஏற்றி வரம் 
கேட்கும் காதலர் 
நாங்கள் தான் ................!!!

கஸல் 563
 ----

காதலின் தேசிய பாடல் 
காதல் தோல்வி பாடல் 
நீ அதை தானே 
விரும்புகிறாய் .......!!!

வறண்டு இருக்கும் 
காதல் குளத்தில் 
உயிர் வாழ துடிக்கும் 
மீன் நான் ...!!!

உன்னை பாராட்டுகிறேன் 
இல்லாவிட்டால் என்னை 
யாருக்கு தெரிந்திருக்கும் 
கவிதை தந்தாயே ....!!!

கஸல் 594

------

யார் யாருக்கு என்று 
மனமே முடிவு செய்யும் 
நீ ஏன் முடிவு செய்தாய் ...?

காதல் மூன்று எழுத்து 
பிரிவு மூன்று எழுத்து 
எதை தெரிவு 
செய்யப்போகிறாய் ...?

நான் இறுதியாக 
சிரித்தது -உன் 
காதலுக்கு முன் .....!!!

கஸல் 595

-----

காற்றைப்போல் நீ 
எப்போது எப்படி 
வருவாய் என்று தெரியாது 
நாணல் நான் ....!!!

இதயத்தில் 
இருப்பதற்கு இடம் 
காதல் இல்லை 
இறக்கும் வரை 
இருக்கணும் காதல் 
நீ பட்டாம் பூச்சியாய் ....!!!

நினைத்த நொடியில் 
கனவும் வராது 
காதலும் வராது 
கண்ணீர் மட்டும் வருகிறது ...!!!

கஸல் 596

------

என்னை பார்க்காமல் 
நீ ஒதுக்குகிறாய் 
என் இதயத்தை 
வைத்து கொண்டும் ....!!!

உன் பார்வைகள் 
கவிதை ஆகின 
இப்போ கவிதை 
கண்ணிழந்து விட்டது ....!!!

காதல் வேண்டாம் 
என்கிறது அனுபவம் 
காதலால் சாகிறது 
உயிர் ....!!!

கஸல் ;597

------

ஆமை வேகத்தில் 
அசுர காதலில் நீ 
முயல் வேகத்தில் 
ஆமை காதல் நான் ...!!!

நினைவுகள் 
இனிக்க வேண்டும் 
புளிக்க வேண்டும் 
நீ எரிக்கிறாய் ....!!!

கிணற்றில் ஊற்று 
தாகம் தீர்க்கும் 
கண்ணீரில் ஊற்று 
தாகம் கூட்டும் ....!!!

வருவதும் போவதும் 
இறைவன் கையில் 
அதை காதலில் 
பயன் படுத்திகிறாய் ....!!!

கஸல் 598
-----

நினைவு கனவு காதல் 
எல்லாம் உனக்கு 
பறக்கும் பட்டம் 
நான் காற்றில்லாமல் 
தடுமாறுகிறேன் .....!!!

நீ வா இல்லை போ 
நான் வதை உதை
படுகிறேன் காதலால் ....!!!

மூச்சு விடுகிறேன் 
என்றால் 
உன்னால் இல்லை 
நீ தந்த காதலால் .....!!!

கஸல் 599
------

காக்கை தூக்கிய வடை 
நீ வைத்திருப்பாயா ..?
போடுயாயா என்ற 
ஏக்கத்தில் நான்....!!!


நரிக்கு 
எட்டாத திராட்சை நீ 
புளிக்கும் என்று போக 
முடியவும் இல்லை 
எட்டுகிறாயும் இல்லை ....!!!


இரண்டுபேரும் ஊதிய 
இதயபலூன் -நீ 
அளவுக்கு மீறி ஊதி 
வெடித்த பலூனை பார்த்து 
சிரிக்கிறாய் .......!!!


கஸல் ;600

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கஜல் கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்

கஸல் கவிதை பற்றிய சிறு விளக்கம்

சமுதாய முன்னேற்றம்