கே இனியவன் - கஸல் 14

நீ உன் முகத்தை
மாற்றப்போவதில்லை
உன் முகத்தில்
முள்ளும் மலரும் 


உன் நினைவே
என் வாழ்க்கை சக்கரமாக
வைத்திருக்கிறேன்
மீண்டும் மீண்டும்
உனக்குள் விழுவதற்கு

உன் நினைவோடு
வாழும் எனக்கு
அமாவாசையும்
பௌணமியும்
ஒன்றுதான் 


+
கே இனியவன் -  கஸல் 14

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கஜல் கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்

கஸல் கவிதை பற்றிய சிறு விளக்கம்

சமுதாய முன்னேற்றம்