கவிப்புயல் இனியவன் கஸல் 240 - 250

உன் காதலை ..
நான் பெறுவதற்கு ...
விளக்காக இருக்கவா ..?
வெளிச்சமாக இருக்கவா ..?

விளக்காக இருந்தால் ..
ஊதி நூர்கிறாய் ...
வெளிச்சமாக இருந்தால் ..
ஓடி ஒழிக்கிறாய் ....!!!

காதல் மனத்தால் ..
கட்டும் கோயில் ..
சாமி யார் ..?
பூசாரியார் ..?
நீதான் முடிவு சொல் ...!!!

கஸல் ;240

-----

நான் ..
காதலுக்காக ஏங்குகிறேன் ...
நீ 
காதல் சொல்ல தயங்குகிறாய் ...

வயிறு பசியில் அழுகிறது ...
கண் கண்ணீருக்காக அழுகிறது ..
மனம் காதலுக்காக அழுகிறது ...

மன காயப்படும் போது ...
யார் ஆறுதல் சொல்வார்கள் ..
என்று எங்கும் மனம் போல் ..
உன்னை தேடுகிறேன் ...!!!

கஸல் 241

----
என் முக கண்ணைவிட ..
இதய கண் தான்... 
உன்னை அதிகளவு ...
பார்த்திருக்கிறது ....!!!

என் காதலில் நீ 
என்றும் இருப்பாய் ...
இதயத்தில் மறைந்தாலும் ...!!!

காதல் கற்பூரம் போன்றது ...
பிரகாசமாக எரியும் ...
விரைவில் அழிந்துவிடும் ...!!!

கஸல் 242

----

நீயே ...
காதல் நாயகியாகவும் ..
இருக்கிறாய் ..
காதல் வில்லியாகவும் ..
இருக்கிறாய் ...!!!

நான் வணங்கிய..
கடவுளிடம் கேட்பதெல்லாம் ..
உன்னைத்தான் ...!!!

தயவு செய்து ..
என்னிடம் இருந்து ...
விலகிவிடு ... 
என் இதயம் வலியால்..
துடிக்கிறது ....!!!

கஸல் ;243

----

நான் ...
உன்னை காதலிக்க ..
முன்னரே உன் நிழலையே ..
காதலித்தேன் ...!!!

காதல் கண்ணுக்கு தெரியாது ..
கண் பார்க்கமல் வராது ...!!!
காதல் வலிக்காமல் இனிக்காது ...!!!

கண்ணே ...
கப்பல் கடலில் தான் ...
மிதக்கனும்...
காற்றில் அல்ல ...!!!

கஸல் 244

----

நான்....நீ...!!!
நீயார் ...?
நீ ...நான் .....!!!
நான் யார் ...?

காதல் அழகும் ...
அழுக்கும் நிறைந்தது ...
ஆனாலும் அழகு ...!!!

என்னை நானே ..
தேடுகிறேன் ..
உன்னில் இருப்பதை ..
மறந்துவிட்டேன் ....!!!

கஸல் 245

----
காதலில் தற்கொலை...
முட்டாள்களின் முடிவு ...
தற்கொலை செய்தவுடன் ..
அவர்கள் காதல் அழிவதில்லை ,....
அவர்கள் தான் அழிகிறார்கள் ...!!!

காலையில் இளம் ..
சூரியன் நீ ..
ஏன் இப்படி ...
சுட்டெரிக்கிறாய் ....?

நீ நிலவும் ...
சூரினனாகவும் ..
இருந்தால் ...
வானத்தில் எனக்கு ...
என்ன வேலை ...?

கஸல் 246

---

இன்று காதல் பரீட்சை ...
எழுதினேன் ...
விடையும் நீ ...
வினாவும் நீ ...

நான் கண்ட பூக்களில் ..
அடிக்கடி மலரும் பூ ...
உன் சிரிப்பு ...!!!

வருமானம் இல்லாதவன் ..
வீட்டில் அடுப்பு எரியாதது போல் ..
நீ இல்லாத இதயத்தில் ...
நினைவுகள் -இல்லை 

247
----

காதலும் நீ 
காதலியும் நீ 
என்றுதானே இருந்தாய் ...!!!
எப்போதென்ன என்னிடம் ..
காதல் மட்டும் இருக்கிறது ....???

கண்ணுக்குள்.... 
கண்ணீர் மட்டுமல்ல ...
இரத்தமும் இருக்கிறது ...
மறந்து விடாதே ....!!!

நான் வடக்கு திசை ..
நீ தெற்கு திசை ...
எப்படி இணைவது ...???

கசல் 248

----

மெழுகு திரியாய் ..
உருகுகிறேன் ..
நீ 
விட்டில் பூச்சியாக கூட ..
மாறவில்லை ....!!!

வா இருவரும் ..
ஆகாய முகிலுக்குள் 
முத்தமிடுவோம் ...!!!

நீ அழுவது ..
வைரக்கல் ..
நான் அழுவது ..
மாணிக்கக்கல் ....!!!

கஸல் 249

----

உன்னை கண்டவுடன் ..
என் உயிர் மொழியே ..
மறக்கிறது......!!!

வனத்தில் பறக்கும் ...
ஊர்குருவி போல் ..
காதலை கத்தித் திரிகிறாய் ...
பயனில்லை ....!!!

உன்னை நினைக்கும் ..
நேரமெல்லாம் -ஒரு 
கண் கண்ணீரையும் ...
மறுகண் பன்னீரையும் ..
வடிக்கிறது கண்ணே ...!!!

கஸல் 250

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கஜல் கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்

கஸல் கவிதை பற்றிய சிறு விளக்கம்

சமுதாய முன்னேற்றம்