கவிப்புயல் இனியவன் கஸல் 250 - 260

உன்னிடம் நான் 
இழந்தை முள்ளில் 
சிக்கியதுபோல் 
தவிக்கிறேன் ....!!!

நான் உறங்கும் 
தருணத்தில் தான் 
காதல் மொழி பேசுகிறாய் 

கப்பலில் துடுப்பு இல்லாத 
போது தளம்புவது போல் 
தளம்பும் காதலுக்கு 
துடுப்பாக இருந்தது நீ 

கஸல் 251

-----

காதல் நினைவில் - கற்பனை 
கனவில்- மாயை 
உள்ளத்தில் - உண்மை 

நான் காதலில் மரபு 
கவிதை -நீ 
மூன்று வரி ஹைக்கூ 
இரண்டும் சுகம் ..!!!

எழுதும் கவிதை -நீ 
எழுதும் பேனா நான் 
பேனாவில் மை 
தீர்ந்துவிட்டது ....!!!

கஸல் 252

-----

நான் காதல் பறவையாக 
மாறிவிட்டேன் 
வெகு தூரம் -உன்னை 
மறக்க பறக்க போகிறேன்....!!!

காதலில் இருந்துதான் ...
அமாவாசை ..
பௌணமி 
வந்ததுபோல் ...?

நான் உன்னை ..
பார்க்கிறேன் ...
நீ என்னை பார்க்கிறாய் ..
காதல் எங்கே நிற்கிறது ...?

கஸல் 253

-----

நான் ஆறடி 
இறந்தாலும் ஆறடி 
இடையில் நீ யாரடி ...?

நிலாவை பார்க்கும் 
போது என் நிலா 
உன் நினைவுதான் 
கொல்லுது ....!!!

காதல் சொல்லுகிறாய் 
கண்பார்க்கிறது ..
இதயத்தில் காதல் இல்லை 

கஸல் 254

----

நீ 
காதல் தேன் ..
அதிகம் அருந்திவிட்டேன் 
எல்லாம் நீயாக தெரிகிறது 

என்றும் உன் நினைவு 
தான் என் மூச்சு 

காதல் தேரை 
நான் இழுக்கிறேன் 
சில்லுக்கு நீ கட்டை 
போட்டு நிறுத்துகிறாய் ...!!!

கஸல் 255

-----

காதலில் 
பொறுத்திருந்தேன் .. 
காதல் தேவதையாக .. 
கிடைத்தாய் ..!!! 

காவியங்கள் 
காதலால் சிறப்பு பெற்றன .. 
நம் காதல் காவியமாகலாம் ...!!! 

காதல் ஆமோதித்து விட்டது 
காலம் ஆமோதித்துவிட்டது 
காரணம் சொல் நீ ஏன்..? 
உன்னிடம் ஏன் காதல் இல்லை ...!!! 

கஸல் 256

----

உனக்கும் காதல் ..
பருவம் -எனக்கும் 
காதல் பருவம் 
காதலிப்பதில் -என்ன ..?
தவறு ....!!!

கண்டவுடன் காதல் 
கண்டத்தில் தான் 
முடியும் ....!!!

நான் காதல் இதயத்துக்குள் ...
காதல் என் இதயத்துக்குள் ....
நீ ஏன் வேடிக்கை பார்க்கிறாய் ...!!!

கஸல் 257

----

உன்னை மறந்து 
ஒரு வருடம் 
காதல் உறுதியாகி 
ஒருவருடம் ....!!!

உன்னை காதலில்லாமல்... 
என்னால் பார்க்க ...
முடியவில்லை ....!!!

பலவகை வர்ணம் காதல் 
பலவகை எண்ணம் காதல் 
நீ ஒன்றும் இல்லாத ..
சடப்பொருள் .....!!!

கஸல் ;258

----

நான் தண்ணீருக்குள் 
தாகம் -நீ 
தண்ணீருக்குள் 
குமிழி .....!!!

நெருஞ்சி முள் 
குற்றும் போது 
தெரியாது -உன்னை போல் 
இருந்துகொண்டே ..
வலிக்கும் ....!!!

கவிதையில் அர்த்தம் 
நான் ...!!!
அர்த்தத்தில் நாதம் காதல் 
நீ 
கவிதையையே வெறுக்கிறாய் ...!!!

கஸல் 259

----

பூவில் அழகு மட்டுமல்ல ..
தேனும் உண்டு 
உன்னை போல் எல்லாம் ...!!!

உன்னை பார்த்த ..
நாள் முதல் 
காதலை மட்டுமல்ல 
கண்ணையும் இழந்துவிட்டேன் ...!!!

நான் தாகம் தீர்க்கும் 
ஆற்று நீர் 
நீயும் நீர்தான் 
வெந்நீர் ....!!!

கஸல் 260


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கஜல் கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்

கஸல் கவிதை பற்றிய சிறு விளக்கம்

சமுதாய முன்னேற்றம்