கவிப்புயல் இனியவன் கஸல் 390 - 400

நீ தான் என் 
காதலி -உனக்கும் 
தெரியும் ஏன்
விலகுகிறாய் ...?

நேராக செல்ல 
வேண்டிய காதல்பாதை 
நமக்கு மட்டும் ஏன் 
வளைகிறது ...?

காதலித்தால் 
காதல் பாட்டு 
வரவேண்டும்
உனக்கு சோகப்பாட்டு 
வருகிறது ....!!!

கஸல் 391

---

சூரியனை கோள் 
நெருங்கும் போது 
ஈர்ப்பு கூடும் -நீ 
தூர கோள்கலாய்
இருக்கிறாய் 

கற்பூரம் வாசனையில் 
எரிவதில்லை 
தீ பிடிக்க வேண்டும் 

உன்னை 
காதலிப்பதும் 
உன் நிழலை 
காதலிப்பதும் 
ஒன்றுதான் 
அவ்வப்போது வரும் ...!!!

கஸல் 392

----

நினைவுக்காக 
காதல் இல்லை 
உன் நினைவில் 
காதல் வருவதில்லை 

நண்டு நேராக 
நடக்காது -நம் 
காதலைப்போல் 

இரு கை சேர்ந்தால் 
சத்தம் வரவேண்டும் 
எனக்கு இரத்தம் 
வருகிறது ....!!!

கஸல் 393

----

நடந்துபார் 
தூரம் தெரியும் 
காதலித்துப்பார் 
துயரம் தெரியும் 

நட்பு வேறு
காதல் வேறு 
உன்னிடம் இரண்டும் 
இல்லை 

மீன் வலையில் 
சிக்கிய மீன் 
தப்பியதுண்டு 
உன்னிடம் நான் 
எப்படி தப்புவது ...?

கஸல் ;394

----

காதல் என்பது 
ஊற்று -அது 
பாறைக்கல்லில்
வராது 

உனக்கு யாரை 
வேண்டுமென்றாலும் 
அறிமுகப்படுத்துகிறேன் 
என்னை விட்டுவிடு ...!!!

பௌர்ணமியில் 
பூத்த அக்கினி பூப்போல் 
உன் நினைவுகள் 
குளிர்கிறது ....!!!

கஸல் ;395

----

அகிலமே இயங்குவது 
ஈர்ப்பில் தான்
உனக்கு மட்டும் -அது 
விதிவிலக்கு .....!!!

உனக்கும் 
காதலுக்கும் உள்ள 
ஒற்றுமை கவலைதான் 

காதலின் வெற்றிக்கயிறு 
தாலி 
தோல்விக்கயிறாக 
மாற்றுகிறாய் ....!!!

கஸல் 396

----

காதல் கூட்டு செயல் 
அல்ல அது தனிசெயல் 
நீ ஏன் சந்தேகம் 
கொள்கிறாய் ....?

பூவில் கருங்குளவி 
தேன் குடித்தால் 
பூவிற்கு கவலை 
நான் தேனி 

உன்னை நினைக்கும்
கவிதை வந்த காலம் 
போய்விட்டது - இப்போ 
கவிதை எழுத சொல்கிறாய் ....!!!

கஸல் ;397

-----

மொட்டு என்றால் 
பூக்க வேண்டும் 
நீ காதலில் எப்போது 
பூப்பாய .....?

விஞ்ஞானமே உலகை 
ஆக்கும் போது -நீ 
காதலால் என்னை 
அழிக்கிறாய் ...!!!

இரக்கம் உயிரின் 
பண்பு - நீ கற்றுக்கொள் 
என்னிடம் இருந்து 
இரக்கபடுவது எப்படி என்று ...?

கஸல் 398

-----

சிரித்தால் கிடைப்பது 
காதல் - எனக்கு 
கிடைத்தது வலி 

காதல் ஒரு பூமாலை 
அதுதான் உதிர்கிறது 
வாடவில்லை ....!!!

கண்ணால் கைது செய் 
அது காதல் ...!!!
விலங்கிடாதே -அதுகாதல் 
தண்டனை ...!!!

கஸல் 399

----

காதலுக்கு ஏக்கம் 
மூலதனம் 
ஏமாற்றம் காதலுக்கு 
அசையாத சொத்து ...!!!


நிலம் என்றால் 
பயிர் வளரவேண்டும் 
இதயம் என்றால் 
காதல் வளரவேண்டும் 
உன் இதயத்தில் நான் 
ஏன் வளரவில்லை ....?

உன் நினைவுகளை 
சங்கிலி ஆக்கினேன் 
சங்கிலி இப்போ அறுகிறது 

கடலில் முத்து 
எடுத்தாலும் -உன் 
இதய முத்தை 
எடுக்க முடியாது ...!!!


உன்னை கைது 
செய்தேன் -உன் 
இதயத்தை மட்டும் 
விட்டு விட்டேன் ...!!!

கஸல் 400

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கஜல் கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்

கஸல் கவிதை பற்றிய சிறு விளக்கம்

சமுதாய முன்னேற்றம்