கவிப்புயல் இனியவன் கஸல் 530 - 540

ஆடையை மாற்று
ஆளை மாற்றாதே
காதல் இதயத்தோடு
சங்கமாகும் கலை ....!!!

மல்லிகை வாசனைக்கு
பூக்கவில்லை
தன் வாழ்க்கைக்காக
பூக்கிறது - காதலும்
அப்படித்தான் ....!!!

தரையில் கண்ட
காசும் -உன் கடிதமும்
ஒன்று தான் சந்தோசத்தில்
ஆனால் இரண்டுக்கும்
உடமையாளன் வேறு ....!!!

கஸல் 531
-------------

எரியும் நெருப்புக்கு
எண்ணை ஊற்றுவது
போல் -என்னை எரிக்கிறாய்

காதலில் வலியை தடுக்க
எந்த சட்டமும் இல்லை
அதுதான் உனக்கு துணிவு

என் கவிதை
ஒவ்வொன்றும்
நீ தந்த பரிசு
தோல்வியை தந்தாய்

கஸல் ;532
--------
காத்திருப்பது காதலுக்கு
அழகுதான் -ஆனால்
இதயத்துக்கு வலி ...!!!

காதல் ஒரு வகை
கணிதம் தான்
வலி பெருக்கல் விதி
சந்தோசம் கூட்டல் விதி
முடிவு பிரித்தல் விதி ....!!!

நீ காதலிக்காது
விட்டாலும் எனக்கு
காதல் வந்திருக்கும்
உன்னை பற்றிய கவிதை ...!!!

கஸல் 533
------------
உன்னை காதலித்ததில்
இருந்து கண்ணீரால்
ஓவியம் வரைகிறேன்
அப்போதும் நீ அழகு ...!!!

காதலில் பூக்கும்
போதே வாடும் மலர்
நீ தான் தந்திருக்கிறாய் ....!!!

உன்னை
நினைக்கிறேன்
நீ வருவாய் என்று
நிழல் கூட வரவில்லை
என்றாலும்
இதயம் வலிக்கவில்லை ...!!!

கஸல் 534
------------

நீ வானவில்
நான்
இருண்ட வானம்...!!!

கவிதைக்கு கற்பனை
வேண்டும் -உன்னை
நினைத்தால் கற்பனை
வரமுன் கண்ணீர் வருகிறது

இறக்கமுன் காதல்
வெற்றி பெறும் என்ற
நம்பிக்கையை இழக்க
வைக்கிறாய் ....!!!

கஸல் 535
-------
நான் காதல் பறவையாக
இருப்பதால் தான் -உன்
வலிகளை சுமத்து கொண்டு
பறந்து திரிகிறேன் -இன்பமாய்

காதலில் நீ வந்தால்
எனக்கு அமாவாசை
அந்தளவுக்கு வலி
காதல் எனக்கு பூர்வ கால
தண்டனை போல் ...!!!

நான் உன்னை ..
பார்க்கிறேன் ...
நீ என்னை பார்க்கிறாய் ..
காதல் - இருவருக்கும்
கைகாட்டி விட்டு செல்கிறது ...!!!

கஸல் ;536
---------
நீ
காதல் மாது
உன் கண் காதல் மது
இரண்டும் என்னை
பித்தனாக்கி விட்டது ...!!!

சுவாசிப்பதற்கு காற்று
வேண்டாம் -நீ வேண்டும்
உன் மூச்சை
குளிர்மையாக விடு...!!!

காதல் வாகனத்தில்
ஒரு சில்லுடன் ஓடும்
காதல் வாகனமாகி விட்டேன்

கஸல் 537
------

காதலில்
பொறுத்திருந்தேன் ..
காதல் தேவதையாக ..
நீ வரவில்லையே ...!!!

காதல்
சந்தோசமடைவதை
விட தோல்வியில் தான்
ரசிக்கிறார்கள் நம்
காதலைப்போல் ....!!!

காதல் கொட்டி கிடக்கிறது
என்னிடம் சருகுகள் போல்
உன்னிடம் ஒரு இதழ் கூட
இல்லையே...?

கஸல் 538
----------
காதலர் தினத்தில்
காதலை ஆரம்பித்தோம்
காதல் தோல்வி தினத்தை
நாம் ஆரம்பிப்போம் ...!!!

உன்னை காதலில்லாமல்...
இருந்திருந்தால் என்னை
தெரிந்திருக்காது -உன்னை
பிரிந்ததால் என்னை தெரிகிறது ..!!!

பலவகை எண்ணம் காதல்
பலவகை இன்பம் காதல்
நீ ஒன்றும் இல்லாத ..
சடப்பொருள் .....!!!

கஸல் ;539
-------

நான் தண்ணீருக்குள்
தாகம் -நீ
வெந்நீரில் சூடு

உண்மை முள் குற்றும்
எடுத்துவிடலாம்
காதல் முள் குற்றியபின்
எடுக்க முடியாது

கவிதையில் அர்த்தம்
நீ
வரிகள் நீ
கவிதைதான்
எழுத முடியவில்லை ...!!!

கஸல் 540

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கஜல் கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்

கஸல் கவிதை பற்றிய சிறு விளக்கம்

சமுதாய முன்னேற்றம்