கவிப்புயல் இனியவன் கஸல் 540 - 560

என் ஒவ்வொரு வரியும்
உன்னை பற்றிய துடிப்புக்கள்
நீ தவிக்காமல் இருக்கிறாய்

காதலி இல்லாமல் நான்
வாழ்வேன் -காதல்
இல்லாமல் உன்னைப்போல்
வாழமுடியாது

உன் காதல் கண்ணாடி
என் காதல் கருங்கல்
நானே உடைந்து விட்டேன்
காதல் வலியால்....!!!

கஸல் 541

----

காதலுக்கு நீஅழகு
கவிதைக்கு நான் அழகு
எப்படி காதல் அழிந்தது ...?

நீ வலது கண்
நான் இடது கண்
நம் காதல் குருடானது

காதலர் விடும் மூச்சு
பூவுலகில் பூக்கும் பூக்கள்
காதலியே உன் மூச்சின்
வெப்பம் என்னையே கருக்கி
விட்டது .....!!!

கஸல் 542
---------

உன்னை கண்டிருந்தால்
காதலித்து இருக்க மாட்டேன்
உன் கண்னை கண்டு
தொலைத்து விட்டேன் .....!!!

உன்னால் நான் மனிதன்
ஆகிறேனோ தெரியாது
கவிஞன் ஆவேன்

நீ என்னில் உரசினால்
காதல் வந்திருக்கவேண்டும்
கண்ணீர் எப்படி வந்தது ...?

கஸல் 543
----------
நீ கண்ணில் தோன்றி
கண்ணில் முடியும் காதலை
விரும்புகிறாய் -அது
எனக்கு வேண்டாம் ....!!!

கன்ணில் தோன்றி
வார்த்தையில் முடியும்
காதலும் வேண்டாம் ....!!!

காதல் உன்னிடத்தில்
வந்திருக்க வேண்டும்
நீ என்னிடத்தில் வந்து
விட்டாய் காதல்
வரவில்லை .....!!!

கஸல் 544
----------
நீ சூரியன் என்று
சொல்லாதே எனக்கு
தெரியும் -ஏன் பின்பு
இரவு தான் வருவேன்
என்று அடம் பிடிக்கிறாய் ...!!!

அருமையான கவிதை
வரும் உன்னை கண்டவுடன்
அத்தனையும் பயனற்று போகும்

காதல் காயமாக இருந்தால்
தாங்கிக்கொள்ளலாம்
நீ தான்
வடுவை தந்து விட்டாயே ....!!!

கஸல் 545
-----

உனக்காக காத்திருக்கிறேன்
வானம் இருண்டுவிட்டது
கவலைப்படாதே -மனம்
இருளவில்லை .....!!!

எத்தனையோ சாலைகளில்
இத்தனை வயது வரை
விபத்தில் சிக்கவில்லை
உன்னிடம் சிக்கிவிட்டேன் ....!!!

உன் நினைவோடு இடறி
விழுந்தேன் - என் இதயம்
அழுகிறது -உன் இதயத்தை
காப்பாற்றி விட்டேன் .....!!!

கஸல் ;546
-----------
என்னை கண்டதும்
முகம் திருப்புகிறாய்
காதலை
வெறுக்கிறாயா ..?
ஏற்கிறாயா ....?

நம் காதலில் ஏதோ
ஒரு வலி தெரிகிறது
உன் இதயம் என்னை
பார்த்து ஏளனமாய்
சிரிக்கிறது.....!!!

உன் கண்ணீர் நெய்
என் நினைவு திரி
காதல் எரிகிறது ....!!!

கஸல் ;547
-----
உன்னை கண்டவுடன்
என் இதயம் சிரிக்கிறது
கண் தண்ணீரை தருகிறது

காதல் இதயம் உள்ளவருக்கு
வரும் அற்புத கலை
உனக்கேன் வந்தது ....!!!

நீ வீட்டில் இருந்து
வரும் போது காத்திருந்த
என் கண்கள் -இப்போ
இமை கொண்டு மூடுகிறது ...!!!

கஸல் 548
----------

நீ காதலில்
இரவா ..? பகலா ...?
நான் சிரித்தால்-நீ
முறைக்கிறாய்
நான் முறைத்தால்
நீ - கை
கொட்டி சிரிக்கிறாய்....!!!

உன் காதல் கடல்
வறண்டு விட்டது
நான் காதல் மீன்
பிடிக்கவருகிறேன்....!!!

உன்னை பார்க்கமாட்டேன்
என்று கண்ணிக்கு சொன்னேன்
உன்னை
கண்டவுடன் இதயம் சுரண்டுது ...!!!

கஸல் 549
--------

நான்
வார்த்தை இருந்தும்
பேசமுடியவில்லை
நீ வார்த்தையால்
என்னை ஊமையாக்கி
விட்டாய் .....!!!

காதல் துக்கமா ...?
காதல் தூக்கமா ...?
சொல்லிவிட்டு போ
காத்திருக்கிறேன் ....!!!

காதல் புயலில்
சிக்கினால் மரம்
முறியும் -நான்
அருகம் புல் எப்படி
சிக்கினேன் ....!!!

கஸல் -550
----------------

உன் நினைவுகள் என்
இதயத்தை கறையான்
போல் அரிக்கிறது
நீ எப்படி சிரித்து
கொண்டு இருக்கிறாய் ...?

ஒவ்வொரு
இதயத்துடிப்பும்
உன் பெயர் சொல்ல
ஆசைப்பட்டேன் -உன்
வலியைத்தான்
சொல்லிகிறது

உன் காதல் கண்ணில்
இருந்து இதயத்துக்கு
வரவில்லை - கண்ணீராய்
கரைக்கிறாய் ....!!!

கஸல் ;551
------
உன் எண்ணங்கள்
உன்னை மேயும்
போது கவிதை வர
வேண்டும் - வருகிறது
கண்ணீர் ....!!!

சோகத்தில் உன்னை
புகைப்படம் எடுத்தேன்
கண்ணீரால் கழுவுகிறேன்
புகைப்படம் அழகாக
இருக்கிறது ....!!!

உன் வார்த்தை அதன்
எல்லை கடந்து வருகிறது
காது தானாகவே
மூடிக்கொள்ளுகிறது....!!!

கஸல் ;552
-------

இருளாய் இருந்த காதலை
கவிதை கொண்டு ஒளிர
செய்கிறேன் - கவிதையே
அணைகிறது ....!!!

உண்மையில் நான்
உன்னை காதலித்தேன்
நீ வேடிக்கைக்கு
காதலித்தாய் - பரவாயில்லை
கவிதை கிடைத்தது ....!!!

நீ கண்ணீராக மாறு
அப்போதுதான் எப்போதும்
என்னுடன் இருப்பாய் ....!!!

கஸல் ;553

------

நீ பிரிந்த போது -நான்
நிராயுத பாணியாகி
விடுவேன் என்று கனவு
கண்டாய் - காதல்
என்னுடன் இருக்கிறது ....!!!

காதல் கவிதையை
பன்னீராலும்
கண்ணீராலும்
எழுத முடியும் ....!!!

நான் உன்னை நோக்கி
காதல் அம்பை பூ
கொண்டு எரிகிறேன்
நீ அதை எரிக்கிறாய் ...!!!

கஸல் 554
------------
பார்ப்பவர்களுக்கு தான்
நாம் காதலர் -காதல்
உன்னை விட்டு பிரிந்து
வருவதை நான் அறிவேன்

உன்னை
நினைக்கும் போது
இதயத்தில் பூக்கள்
மலரும் என்றிருந்தேன்
மொட்டாகவே இருக்கிறது

சாப்பிட்ட பின் ஏப்பம்
விடுவதுபோல் -தூக்கி
எறிந்து விட்டாய் காதலை ....!!!

கஸல் ;555
-----------
உன்னை நானும்
என்னை நீயும்
கைது செய்துவிட்டோம்
காதல் ஆயுள் கைதி

காதல் இன்பம் மட்டும்
வாழ்க்கையில்லை
காதலில் துன்பமும்
வாழ்க்கைதான்

நான்
காதல் கண்ணாடியால்
உன்னை ரசிக்கிறேன் -நீ
கல் எறிந்து கண்ணாடியை
உடைக்கிறாய் ....!!!

கஸல் 556
-----------

காற்று மூச்சு விடத்தான்
அவசியம் -நீ காற்றை
பேச்சுக்கு பயன்படுத்துகிறாய்

மழை காலத்தில் வரும்
வண்டுகள் போல்
அப்பாப்போ வந்து போகிறாய்
என் காதல் அழுகிறது

வெயிலில் பூ வாடலாம்
காதல் மரத்தை வாட
வைக்கிறாயே ...!!!

கஸல் ;557

----------
காதலின் தோல்வியின்
அடையாள சின்னத்தை
தந்து விட்டாய் -நன்றி
என் கண்ணுக்கும் புரியும்

நீ காதல் சூரியனா ..?
காதல் சூரிய ஒளியா ..?
புரியாமல் தவிர்க்கிறேன்
வார்த்தை சுடுகிறது

காதல் வானவில்லை
கடலில்
வரைய சொல்லுகிறாய்
மிக விரைவாக அழிப்பதற்காக

கஸல் 558
-----------

காதலித்த பின் நான்
துடித்து கொண்டு
இருக்கிறேன் - நீ
சாதாரணமாக இருக்கிறாய்

என் முத்தங்களை
தந்துவிடு நினைவுகளை
வைத்துக்கொள் ....!!!

உனக்காக எழுதிய
கவிதை எல்லாம்
கல்லறை வாசகங்களாக
மாறி வருகின்றன ....!!!

கஸல் 559
-----------

உனக்காக நான்
காத்திருப்பேன்
நேரம் காத்திருக்குமா..?
உன்னைப்போல் அதுவும்
ஓடுகிறது ....!!!

உன்னை சுவாமியாக
கண்டேன் -இப்போது
சாமியாராக போலி
வார்த்தை கூறுகிறாய்

வாழ்க்கைக்கு வளம்
காதல் -அதை வாள்
ஆக்கிவிட்டாய் -நீ

கஸல் 560

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கஜல் கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்

கஸல் கவிதை பற்றிய சிறு விளக்கம்

சமுதாய முன்னேற்றம்