கவிப்புயல் இனியவன் கஸல் 420 - 430

இறந்தால் தான் சமாதியா ...?
உன் நினைவுகள்
என்னை கொல்கிறது...!!!

காதல் 
கேட்டால் கிடைக்கும் 
கடைப்பொருள் இல்லை 
நீ கேட்டால் தருகிறாய் ...!!!

காதல் கடிதத்தை 
வர்ணங்களால் 
எழுதுகிறேன் -நீ 
கறுத்த மையால் 
எழுதுகிறாய் ....!!!

கஸல் ;421

---

எல்லா பூக்களும் பூத்து 
குலுங்கும் போது -நீ 
மொட்டாய் இருக்கிறாய் ...!!!

காதலுக்கு உன் கண் 
நீராக இருக்கும் 
என்றிருந்தேன் -நீயோ 
மரமாக வளர்ந்தே விட்டாய் ...!!!

பூவின் மேல் பனித்துளி 
இருந்தால் பூவுக்கு இன்பம் 
கல் துண்டிருந்தால் ....?

கஸல் 422

----

என்
நினைவுதான் உனக்கும் 
வாழ்க்கை என்றே 
சொல்வாய் -இப்போ 
காதலை வெறுக்கிறாய் ...!!!

உனக்கு தெரியாது 
உன்னைவிட காதலை 
நேசித்தேன் - நீ 
என்னை கூட 
காதலிப்பதாக இல்லை ...!!!

நிலவில் காதல் கதை 
கூறுவாய் என்றிருந்தேன் 
உச்சி வெயில்லில் காதல் 
கதை சொல்கிறாய் ...!!!

கஸல் ; 423

----

காதலின் அதி உச்ச பரிசு 
நீ தந்திருக்கிறாய் ...!!!
மறக்க முடியாத வலி ...!!!

வண்டுக்கு பூபேல் 
ஆசை பூவுக்கு வண்டுமேல் 
ஆசை - உனக்கு என் மீது 
எப்போதும் இருந்ததில்லை 
காதல் ...!!!

ஆகாயத்தில் நான் 
விண்மீன் - நீ 
தூண்டில் போட்டு 
பிடிக்கபோகிறாயா...?

கஸல் ;424

----

என்னை 
காதலித்தது 
உன் தலைவிதி என்கிறாய் 
காதலுக்கு 
நீ சொல்லும் விதி...?

உன்னில் காதல் 
தெரியும் என்று 
இருக்கிதேன் -என்னை 
ஏமாற்றி விட்டாய் ...!!!

வானத்தில் 
அசைந்த முகில் -நீ 
அசைந்துகொண்டே இரு 
வானம் அப்போதான் தெரியும் 

கஸல் 425

----

நீ நெருப்பு -உனக்கு 
சூடும்,பயமும் இல்லை 
என்னை தான் எரிக்கிறாய் ...!!!

உன் கதையை 
சிட்டுக்குருவியிடம் 
சொன்னேன் அழுதது 
கழுகிடம் சொன்னேன் 
சிரித்தது ....!!!

நீ கவிதையில்லாமல் 
அழுகிறாய் 
நான் காதல் இல்லாமல் 
அழுகிறேன் .....!!!

கஸல் 426

-----

காற்றைப்போல் 
கண்ணுக்கு தெரியாதவளே
உன்னை பார்க்க துடிக்கிறேன் 

நீ தந்த நினைவும் 
கனவும் -பெருவெள்ளத்தில் 
அடிபட்ட கற்துகள்கள் போல் 
காணவில்லை ...!!!

காதலை மறைக்காதே 
மறுக்காதே -அது 
நாளை யாவருக்கும் 
தெரியும் பரகசியம் ...!!!

கஸல் ; 427

----

காதலில் தோற்றவன் 
காதலியை வெறுக்கிறான் 
காதலை விரும்புகிறான் ...!!!

இதயத்தில் நீ 
அழுவதுதான் -நான் 
கண்ணீராக வடிக்கிறேன் 
வலியிலும் ஒற்றுமை ...!!!

மழை பொழியும் போது 
இடையே மின்னல் இடி 
உன் நினைவுகளும் 
அப்படித்தான் ....!!!

கஸல் 428

----

பூவை வைத்துக்கொண்டு 
காத்திருந்தேன் - இருவரும் 
வாடிவிட்டோம் ...!!!

நீயே ஒரு நட்சத்திரம் 
நட்சத்திரத்தை பிடித்து 
தா என்று அடம்பிடிக்கிறாய் 

என் கண் எப்போதும் 
என்னால் அழுததில்லை 
உனக்காகவே அழுகிறது ...!!!

கஸல் ; 429

----

பரீட்சை முடிவு வந்தது 
நான் சித்தி -நீ 
மத்திமம் ....!!!

உன்னுடன் கப்பல் 
பயணம் செய்கிறேன் 
கரை சேர்வதும் 
தத்தளிப்பதும் 
உன் கையில் தான் ...!!!

வெறும் பானையில் 
சோறு வராது ...!!!
உன்னிடம் இருந்தும் 
காதல் வராது ...!!!

கஸல் ;430

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கஜல் கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்

கஸல் கவிதை பற்றிய சிறு விளக்கம்

சமுதாய முன்னேற்றம்