கவிப்புயல் இனியவன் கஸல் 510 - 520

நீ காதல்
அணையாத விளக்கு
நான் அனைத்தேன்
அணைந்து விட்டாய்....!!!

ஒற்றையடி பாதைபோல்
ஒற்றைகாதல் ஆக்கிவிட்டாய்
நம் காதலை ....!!!

துணியில் படிந்த கறை
வெளுத்தாலும்
போகாது -என் இதயத்தில்
படிந்த கறை நீ எப்படி ...?
மறைந்தாய் ,....???

511
-------
நினைத்து பார்க்கவே
பயமாக இருக்கிறது
உன்னோடு வாழ்ந்த
காதல் காலத்தை ....!!!

ஓடும் மணிக்கூட்டில்
உன்னை சுற்றும் நிமிட
கம்பி நான் -நீயோ
ஓடாத மணிக்கூடு ....!!!

அழைத்தால்
அணைத்தால்
காதல் இன்பம்
ஏன் உனக்கு புரியவில்லை ...?

கஸல் 512
-----------
மழை வெள்ளத்தில்
காணாமல் போன
சிறு கல் போல் -என்
காதல் ஆகிவிட்டது ....!!!

காதல் சுமைதான்
அதற்காக என்னை
கழுதை ஆக்கி விடாதே ...!!!

எல்லோருக்கும் காதல்
வரும் எனக்கு காதல் நோய்
நீ தான் மருத்துவர் ...!!!

கஸல் 513

-----------

உனக்கு கவிதை
எழுதினேன் -எழுத்து
கருவி அழுகிறது
காகிதம் பறக்கிறது ...!!!

நாள் பட்ட காதல்
உறுதியானது -உன்னால்
நான் காதலில் பட்டு விட்டேன் ...!!!

குழந்தை முதுகில்
புத்தக்பை போல் என்
இதயத்தில் உன்னை
சுமக்கிறேன் - நீ எங்கே
போனாய் ....?

கஸல் 514

-----------

காதலில் அநாதை ஆனேன்
அனாதை ஆக்கியது நீ

நீ காந்த கண்
அதனால் தான்
துருப்பிடித்த என்னை
கூட கவர்ந்திருக்கிறாய் ...!!!

என் காதலின்
ஒவ்வொரு படியும்
நீ - படியென்றால்
படிப்படியாக இறங்க
வேண்டும் -நீ குதிக்க
சொல்கிறாயே ....!!!

கஸல் 515

-------------

காதலில் நான் பச்சை
கொடி அசைக்கிறேன்
நீ சிவப்பு கொடியோடு
நிற்கிறாய் ....!!!

அருகில் நின்று இருவரும்
கைபிடிப்பது தான் காதல்
நீ எதிரில் நின்று -கை
தருகிறாய் ......!!!

மூச்சு காற்றில் உன்
பெயர் வந்தது -இப்போ
நினைவில் கூட
வருகிறாய் இல்லை ....!!!

கஸல் 516
---------
உனக்காக காத்திருந்தேன்
நீ வருவாய் என்றிருந்தேன்
நிழல் கூட வரவில்லை ....!!!

என் கண்ணில் வரும்
கண்ணீரில் -நீ
கப்பல் விட்டு
விளையாடுகிறாய் .....!!!

நீ -என்னை
காற்றாடியாக தான்
பார்க்கிறாய் -உனக்கு
வியர்க்கும் போது
என்னை பயன்
படுத்துகிறாய் ..........!!!

கஸல் 517
----------

வா காதல்
மர்மத்தை காண்போம்
என்கிறேன் -நீ
என்னை காதலிக்கவே
இல்லை என்கிறாய் ....!!!

உன் கண்ணை பார்த்து
கவிதை எழுதினேன்
இப்போதும் எழுதுகிறேன்
கண்ணீர் வருகிறது ....!!!

காதலில் அதிகம்
அக்கறை காட்டினேன்
காதல் விரோதியாகி
விட்டேன் .....!!!

கஸல் 518
-----------

நீயே
காதல் தீயை
மூட்டி-ஏன்
இப்போ அணைக்க
துடிக்கிறாய் .....!!!

நிலையாக இருந்தால்
தானே வெற்றி
நீ ஓடித்திரிகிறாய்
இது காதலுக்கு முரண்

நீ பிரிந்து விட்டாய்
என்று நினைனைக்கிறாய்
நான் நீ எப்போ என்னை விட்டு
பிரிந்தாய் என்று கேட்கிறேன் ....!!!

கஸல் 519
-----------

காதலிப்பதே இல்லை
என்று இருந்த என்
கொள்கையை
பொய்ப்பித்தாய் .....!!!

நீ
முன்னர் வந்தால்
இதயம் சந்தோசப்படும்
இப்போ மறைந்து
விடுகிறது ....!!!

காதல் இறைவன்
இருக்கும் இடம்
நீ ஏன் கோயிலுக்கு
செல்கிறாய் ....?

கஸல் 520

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கஜல் கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்

கஸல் கவிதை பற்றிய சிறு விளக்கம்

சமுதாய முன்னேற்றம்