கவிப்புயல் இனியவன் கஸல் 380 - 390

உன் நினைவுதான் 
எனக்கு மலர் மாலை 
இன்பமோ துன்பமோ ...!!!

தண்ணீருக்கு 
நிறமில்லை 
குணமில்லை 
தாகம் தீர்க்கும் 
உன்னைப்போல் ...!!!

வா நிலாவோடு 
பேசுவோம் 
நீ நிலாவை பிடித்து தா 
என்கிறாயே .....!!!

கஸல் ;380

---

நான் 
காதலை தேடுகிறேன் 
நீ காதலிக்கவே இல்லை 

முற்கள் நிறைந்த 
பாதையால் தேடுகிறேன் 
நீ போன பாதையை 

மூச்சாக நீயிருப்பாய் 
என்றிருந்தேன் 
மூர்க்கமாக இருக்கிறாய் 

கஸல் ;381

----

கண்களில் மறுப்பு 
வார்த்தையில் 
அழைப்பு 
காதல் உயிரா ...?
விளையாட்டா ...?

சொல் 
நீ காதல் தேவதையா ..?
காதல் அரக்கனா ...?

இரண்டு இறகை கொண்டு 
பறக்கிறேன் - உன் ஒரு 
இறகின் சிறகுகள் 
உதிர்கின்றன ....!!!

கஸல் 382

----

காதல் பெண்னே 
கவிஞனின் சொத்து 
அவனிடம் வரிக்கு 
பஞ்சமில்லை ....!!!

உன் அன்பு தொல்லை 
என் காதலுக்கு கால்கட்டு 
உன் வலிகள் என் இன்பத்துக்கு 
விலங்கு ....!!!

உன்னோடு நான்
சேர்ந்து வருகிறேன் 
நீ ஒற்றையடி பாதையால் 
போக விரும்புகிறாய் ....!!!

கஸல் ; 383

----
அன்பான காதலி 
அன்பான மனைவி 
ஆடவனில் காலன் ...!!!

காதல் புறாவுடம் 
காதலை சொல்லாமல் 
காதல் கழுகிடம் 
சொல்லிவிட்டேன் ...!!!

நீ அன்பானவள் 
உன் வலிகளும் அழகானவை 
காதலிக்க தெரியவில்லை 
உன் வார்த்தைக்கு ...!!!

கஸல் 384

---

கவிதையால் உனக்கு 
தாஜ்மகால் கட்டுகிறேன் 
நம் காதலும் வரலாறு 
ஆகும் ...!!!

காதலில் 
பௌர்ணமியன்று 
இணைந்தோம் 
அமாவாசையில் பிரிந்தோம் 

உன்னிடம் இருந்து 
எல்லாம் வந்துவிட்டது 
காதலை தவிர ....!!!

கஸல் ;385

----

உன்னை நினைத்து 
கவிதை எழுதினால் 
கதையாக மாறுகிறது ....!!!

வானத்தில் நட்சத்திரம் 
மின்ன வேண்டும் 
எரிகல் மின்னுகிறதே 

அழகான கவிதையில் 
உவமை பிழையாகவும் 
எழுத்து பிழையாகவும் 
வருகிறாய் ....!!!

கஸல் 386

----

காதலில் இன்பம் 
உண்டு -நமக்கு அது 
விதிவிலக்கு ...!!!

அவசர பகுதியில் 
அனுமதிக்க பட்ட 
நோயாளி நான் -நீ 
இப்போதான் காதலை 
சொல்கிறாய் ....!!!

தவளை தண்ணீரில் தான் 
கத்தும் -நீ வெந்நீரில் 
தவளைபோல் கத்துகிறாய் ...!!!

கஸல் 387

----

காந்தம் 
இரும்பை ஈர்க்கும் 
சக்திபோல் காதல்...!!!
இங்கு 
மரக்கட்டையாய் இருக்கிறது ...!!!

கண்ணில் காதல் 
வடிய வேண்டும் 
மோதல் வடிகிறது ...!!!

காதலில்தான் வலி உண்டு 
காதலே வராத உனக்கு 
ஏது வலி ....?

கஸல் 388

----

உனக்கு நிலவை பார்த்து 
கவிதை எழுதினேன் 
நிலவு தேய்ந்துவிட்டது 

தாயின் வயிற்றை 
குட்டி குரங்கு 
கட்டிப்பிடித்தது போல் 
உன் நினைவு -எப்போது
கீழே விழுந்தாய் ,,,?

நீ வெய்யிலில் 
முளைத்த காளான்
அப்படித்தான் இருப்பாய் ...!!!

கஸல் ;389

----

நம் காதல் 
பிரித்தல் குறியீடு 
கண்ணீர் பெருக்கல் 
குறியீடு ......!!!

வேடிக்கை 
பார்க்க காதல் 
உனக்கு 
அழங்காரபொருள் 
அது என் உயிர் ...!!!

நீ காதலில் பேசிய 
வார்த்தைகள் நிச்சயம் 
உதவும் கல்வெட்டுக்கு ...!!!

கஸல் ;390

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கஜல் கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்

கஸல் கவிதை பற்றிய சிறு விளக்கம்

சமுதாய முன்னேற்றம்