கவிப்புயல் இனியவன் கஸல் 430 - 440

கடவுளை காண்பதும் 
காதலியை காண்பதும் 
ஒன்றுதான் இரண்டும் 
தரிசனம் ....!!!

நான் உயிரோடு இருக்கிறேன் 
ஆனால் இறந்து விட்டேன் 
உன் நினைவுகளின் வலியில்..!!!

குழந்தை சிரிப்பு மகிழ்ச்சி 
குமரி சிரிப்பு மகிழ்ச்சி 
உன் சிரிப்பு புதிராக 
இருக்கிறதே ....!!!

கஸல் 431

----

என் கவிதை உன்னை 
காயப்படுத்தியது என்றால் 
நீ என்னை 
காயப்படுத்துகிறாய் ....!!!

வா வலியின் 
உச்ச இடத்துக்கு போவோம் 
வலிகள் மறத்து போகட்டும் 

உனக்காக நான் என்னை 
மறந்துவிட்டேன் ...
என்னை திருப்பி தந்துவிடு ...!!!

கஸல் 432

----

கண்ணால் பேசமுடியும் 
காதலில் என்றால் ...
உன்னால் ஏன் 
பேசமுடியவில்லை ...?

என்னில் தெரியும் அழகு 
நீ -உன்னில் வடியும் 
கண்ணீர் நான் ....!!!

என் வீட்டில் குப்பையாக 
இருந்தாலும் -உன்னை 
கூட்டி தள்ள மாட்டேன் 
இதயம் முழுக்க உன் குப்பை ...!!!

கஸல் 433

----

மீன் வலை நீ 
சிக்கிய மீன் நான் ...!!!

காய்க்கும் மரத்துக்கு 
கல்லெறி விழும் 
நீ அடித்தே பழுக்க 
வைக்கிறாய் ....!!!

உன் முகத்தை உற்று 
பார்த்தேன் -காதல் 
கண் உன்னிடம் இருக்கு 
காதலை காணவில்லை ...!!!

கஸல் 434

----

நான் காதல் புத்தகம் 
நீ அர்த்தமில்லாத வரி...!!!

நட்சத்திரத்தில் -நீ 
மின்னாத நட்சத்திரம் ....!!!
நான் காதல் ஒளி 
நீ காதல் இருள் ...!!!

கஸல் 435

----

செய்த பாவத்துக்கு 
தண்டனையுண்டு 
உணர்ந்தேன் -நீ 
காதலாக வந்தபோது ...!!!

எந்த பரீட்சையிலும் நான் 
தோற்றதில்லை -உன் 
காதல் பரீட்சையை தவிர ...!!!

நான் 
விடுவது கண்ணீர் அல்ல 
நீ தந்த நினைவுகள் 
திரவமாகிறது ....!!!

கஸல் 436

----

நீ தொட்டாசுருங்கி 
நான் அருகில் வரமுன் 
ஓடுகிறாய் ....!!!

நான் தொடர் கதை 
எழுதுகிறேன் -நீ 
சிறுகதை வேண்டும் 
என்கிறாய் ...!!!

நீயும் மதுவும் 
ஒன்றுதான் ...
கொஞ்சம் கொஞ்சமாக 
கொல்வதில்....!!!

கஸல் 437

-----

நீ வார்த்தையால் 
கொல்வதால் தான் 
நான் கவிதையால் 
கொல்கிறேன் ....!!!

உலகில் எது முடிவு
என்று தேடிப்பார்க்கிறேன் 
உன்னை விட்டு ...
விலகுவதற்கு....!!!

வைத்தியர்களின் 
கருணை கொலையும் 
உன் கொலையும் 
ஒன்றுதான் ...!!!

கஸல் 438 

-----
இரண்டும் இரண்டும் 
ஆறு ...
என்று சொல்வதுதான் 
காதல் ...!!!

நீ அர்த்தமானவள் 
என்றால்.... 
அர்த்தமாக பேசு ...
காதலோடு பேசு ...!!!

நான் முற்றவெளியாக 
இருக்க விரும்புகிறேன் 
நீ வேலிபோடுகிறாய் ...!!!

கஸல் 439

----
நீ வருவதில் தாமதம் 
அதனால் கனவில் 
வருகிறேன் ....!!!

நீ காதல் பன்னாடை 
நல்லதை விட்டு 
தீயதை வைத்திருக்கிறாய் ...!!!

நீ காதல் புயல் 
அதனால் தான் 
நீ வரும்போது நான் 
காணாமல் போகிறேன் ...!!!

கஸல் 440

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கஜல் கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்

கஸல் கவிதை பற்றிய சிறு விளக்கம்

சமுதாய முன்னேற்றம்