கவிப்புயல் இனியவன் கஸல் 400 - 410

நீர் குமிழியில் உள்ள
வானவில் நீடிப்பதில்லை
நம் காதல் போல் ...!!!

உன்னை ஒருபக்கம்
என்னை ஒருபக்கம்
காதல் தராசில் வை
நீ நிச்சயம் நிறை குறைவு

விண் மண் தோன்றா
காலத்தில் காதல்
உனக்கு காதல்
வரவில்லை -நீ
எந்த கால காதல் ...?

கஸல் 401

-------

காதல் எல்லோருக்கும்
தாளம் - எனக்கு
மத்தளம் ....!!!

திரியில்லாமல்
நீண்ட நேரம் எரியும்
விளக்கு சந்தேகம்
நாம் காதல் எரிவதுபோல் ...!!!

காதலித்து பார்த்தேன்
காதல் வருமென்று
நீ தான் வந்தாய் ....!!!

கஸல் 402

----------

காதலில்
நினைக்க தெரியும்
மறக்கதெரியாது
உனக்கு என்னை பார்த்து
சிரிக்கத்தெரியும்
காதலிக்க தெரியாது ....!!!

நண்டு பிடியாக
இருந்த காதல்
பனியாக உருகிவிட்டது ...!!!

காதல் வாகனத்தில்
நான் சாரதி
நீ -பயணியில்லை
பாத சாரி ...!!!

கஸல் 403
---------

தூக்கத்தை தொலைப்பது
காதல் -நான் தொந்தரவு
இல்லாமல் தூங்குகிறேன் ....!!!

கவிதையால் காதல்
வந்தது -இப்போ
கவிதை உண்டு
காதல் இல்லை ...!!!

உன்னை நினைத்தால்
சிரிப்பு வரவேண்டும்
நெருப்பு வருகிறது ....!!!

கஸல் ;404

----------

நான் பெற்றதெல்லாம்
காதலுக்காக இழந்தேன்
உன்னால்
காதலை இழந்து விட்டேன்

நீ காதலை மறுத்தாய்
நான் மறுபிறப்பு எடுத்தேன்
இதயத்தில் காதல் இல்லை

ஆசையில்லாத மனிதன்
முழுமனிதன்
காதலித்தவன்
அரைமனிதன்

கஸல் 405

---------

கடலில் தத்தளிப்பதும்
காதலில் தத்தளிப்பதும்
ஒன்றுதான் ....!!!

நிலவில் கால்
வைத்து விடலாம்
உன் நினைவில்
வாழமுடியாது ....!!!

இதயமான -உன்
நினைவை பத்திரமாக
சேமிக்கிறேன் -நீ
பட்டடையில் பதம்
பார்க்கிறாய் ....!!!

கஸல் 406

---------

தீக்குளிப்பதும்
காதலில் குதிப்பதும்
ஒன்றுதான் ...!!!

நட்சத்திரமாக உன்னை
பார்க்கிறேன் ...
நீ மின்ன மறுக்கிறாய் ...!!!

இளமையில் தான்
காதல் வரவேண்டும்
உன் மௌனம்
முதுமையில்
வர வைக்கிறது ....!!!

கஸல் 407

-------

பாம்பு படமெடுப்பதும்
நீ என்னை பார்ப்பதும்
ஒன்றுதான் ...!!!

நீ வலம் வரும் தெருவும்
நான் வலம் வரும் தெருவும்
ஒன்றுதான் -ஆனால்
தொலைவில் நிற்கிறாய் ..!!!

காதலால் சாதித்தவர்கள்
அதிகம் -நீ
சோதித்து பார்க்கிறாய் ...!!!

கஸல் 408

----

அழகான மரத்தில் 
முறிந்த கொப்பு-நீ 

நம் நினைவுகள் 
உனக்கு குப்பை 
எனக்கு வாழ்க்கை 

நீ மெழுகு திரியாக 
இருந்துகொள் - உனக்கும் 
சேர்த்து மெழுகாக 
உருகுகிறேன் ......!!!

கஸல் 409

----

ஆற்றின் கரையில் 
கல் கரைந்து அடையாளம் 
இல்லாமல் போனது போல் 
உன் காதலில் கரைந்து 
காணாமல் போய் விட்டேன் ....!!!

துன்பம் வரும் போது 
என் கடவுளை
நினைப்பேன் -உன்னை 
தான் சொல்கிறேன் ....!!!

நீ தரும் வலியை
பார்த்து இதயம் சிரிக்கிறது 
உனக்கு நல்லாய் 
வேண்டுமென்று ...!!!

கஸல் 410

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கஜல் கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்

கஸல் கவிதை பற்றிய சிறு விளக்கம்

சமுதாய முன்னேற்றம்