கவிப்புயல் இனியவன் கஸல் 490 - 500

நாம் 
காதலிக்கிறோம் 
நம் கவிதை அழுகிறது ...!!!

நீ 
இதயக்கதவின் 
தொடக்கம் -நான் 
இறுதியில் இருந்து 
அழைக்கிறேன் ....!!!

மின்னில் மின் பூச்சி 
சிக்கியதுபோல் -நான் 
உன்னிடம் அகப்பட்டேன் ...!!!

கஸல் 491

-----------

உனக்கு வாழ்க்கை 
கிடைக்கும் என்றால் 
நான் காதல் கதவை 
மூடுகிறேன் ....!!!

செலவழித்தேன் 
உன் வலியை -சேமிப்பு 
போல் பெருகுகிறது 
துன்பம் ....!!!

என் 
காதல் நிலுவையில் 
என்றும் தீர்க்கப்படாத 
கள்ள கணக்கு ....!!!

கஸல் ;492

-----------

ஆண்டவனிடமும் 
காதலிடமும் 
தப்பியவன் -யார் ..?
நான் தப்பி பிழைத்தவன் 
காதலில் ....!!!

என் கவிதையின் 
எண்ணங்களும் நீ 
இயக்கமும் நீ 
கவிதைதான் 
படாதபாடு படுகிறது ....!!!

தூண்டிலில் மீன் 
வரவேண்டும் -என் 
தூண்டிலில் தேள் 
வடிவில் நீ வருகிறாய் ....!!!

கஸல் 493


------------

நிலாவை பார்த்து 
காதலித்தேன் 
நீயும் தூரே 
சென்றுவிட்டாய் ....!!!

கனவில் வந்தாய் 
திடுக்கிட்டேன் 
முன் நிற்பாய் 
என்று இருந்தேன் 
ஏமாந்தேன் ....!!!

நான் தாவரத்தின் 
ஆணிவேர் நீ 
காய்ந்து விழுந்த சருகு ....!!!

கஸல் ;494

------------

காதல் குயில் நீ 
என நினைத்தேன் 
ஆந்தையாய் 
அழறுகிறாய் ....!!!

உன்னை பிரிந்தது 
எனக்கு சந்தோசம் 
தோல்வியை 
காதலித்தேன் .....!!!

நீ காதலின் கல்லறை 
நான் அதில் உள்ள
வாடாத மலர் .....!!!

கஸல் 495

------------

வீட்டில் பூச்சி நீ 
விளக்கு நான் 
காதலாக எண்ணை 
எப்படியாக இருக்கும் 
நாம் காதல் ....?

நினைவுகள் சுமைகள் 
நெஞ்சுக்கு பாரம் 
உனது காதல் 
காதலூக்கே பாரம் 

காதலை தேடி அலைந்தேன் 
காதலாய் வந்தாய் 
என் காதல் எங்கே ...?

கஸல் 496 

-------------

ஆமை முயல் 
கதைபோல் ஆகிவிட்டது 
நாம் காதல் 
நான் முயல் ....!!!

இறைக்க இறைக்க 
கிணறு ஊறும் 
உன்னை நினைக்க 
நினைக்க கண்ணீர் ஊறுகிறது 

உயிரே நீ என் 
உயிர் தான் எப்படி போனாய் 
என்று தெரியவில்லை ....!!!

கஸல் 497 

--------------

சுட்ட வடையை 
சுட்ட காகம் போல் 
சுட்டு கொண்டு 
போய்விட்டாய் -என் 
காதலை .....!!!

காதல் ஒரு சூதாட்டம் 
தான் வந்தால் பரிசு 
போனால் தூசு 
ஆனால் காதல் மலை....!!!

மனசுக்குள் மத்தாப்பு 
நான் மனசு நீ எப்போ 
தீவைப்பாய் ...!!!

கஸல் ; 498

------------

பூ அழகானது 
பூவின் நெற்று 
பயனானது ....
நீ பூவா ..? நெற்றா..?
இரண்டும் இல்லை ...!!!

காதல் நீல வானம் 
காதலர் அசையும் முகில் 
காதல் அழுவதில்லை 
காதலர் சிபிப்பதில்லை ...!!!

நினைவு தான் காதல் 
என்கிறார்கள் -நீ 
என்னை நினைக்கவே
இல்லையே...?

கஸல் 499

------------------

காதல் சூலையில் போட்டால் 
செங்கல் காதல் -நம் 
அதுகூட உடைந்து விட்டது ...!!!

காதலித்த பெற்றோரே 
தம் பிள்ளைகளின் 
காதலுக்கு எதிரி ...!!!

நீ என்னை காதலி 
இல்லை என்றால் 
தோல்வியை தா 
இரண்டும்முள் தான் ...!!!

கஸல் 500

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கஜல் கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்

கஸல் கவிதை பற்றிய சிறு விளக்கம்

சமுதாய முன்னேற்றம்