கவிப்புயல் இனியவன் கஸல் 521 - 530

உன் காதலை ..
நான் பெறுவதற்கு ...
பகலவனா ...?
இருளவனா ...?

பகலாக இருந்தால் ..
ஓடி ஒளிக்கிறாய் 
இருளாக இருந்தால் 
தூங்குகிறாய் .....!!!

காதல் மனத்தால் ..
மனதில் வரும் உயிர் 
அதை சமாதியாக்கி விட்டாய் ....!!!

கஸல் 521

------

நான் ..
காதலுக்காக ஏங்குகிறேன் ...
நீ 
காதலிக்காமல் ஏங்குகிறாய் 

குழந்தை பாலுக்கு அழுகிறது ...
இளைஞன் வேலைக்கு அழுகிறான் 
நான் காதலுக்காக அழுகிறேன் ....!!!

மனம் அழும்போது போது ...
யார் ஆறுதல் சொல்வார்கள் ..
என்று எங்கும் உன்னை 
தேடுகிறேன் -நீ 
மாலையுடன் நிற்கிறாய் 

கஸல் 522

-----

என் கண் தேடுவதை 
காட்டிலும் -இதயம் 
அதிகளவில் தேடுகிறது 
நீ ஏன் இதயத்தை 
வெறுக்கிறாய் ......!!!

என் காதலில் நீ 
என்றும் இருப்பாய் ...
கண் அழுகிறது 
இதயம் வலிக்கிறது ....!!!

காதலில் கற்பூரமாக நீ 
வாழைத்தண்டாக நான்
எப்படி சரிவரும் ....?

கஸல் 523

-----

நீயே ...
காதல் தேவதையும் 
இருக்கிறாய் ..
காதல் பிசாசாகும் 
இருக்கிறாய் ...!!!

நான் வணங்கிய..
கடவுளிடம் கேட்பதெல்லாம் 
உன்னை என்னிடம் இருந்து 
பிரித்து விடு ....!!!
இனியும் இதயம் தாங்காது ....!!!

காதல் என்றால் களியாட்டம் 
என்று நினைக்கிறாய் -நான் 
கல்யாணம் என்று 
நினைக்கிறேன்................!!!

கஸல் ;524

-----

நான் ...
உன்னை காதலிக்க ..
முன்னரே -என்னை 
காதலித்தேன் ...!!!

காதல் கண்ணுக்கு இல்லை 
என்பதால் தான் நீ 
துணையோடு வந்தாய் ...!!!

கண்ணே ...
கப்பல் கடலில் தான் ...
மிதக்கனும்...
காதல் கண்ணீரில் தான் 
மிதக்கணும்....!!!

கஸல் 525

------

காதல் பரீச்சையில் 
நான் சித்திபெறுவதும் 
தோல்வியடைவதும் 
உன் பதில் -தான்
நீ மௌனவிரதம் 

காதலில் சிரிப்பு 
காதலில் களிப்பு 
உனக்கு ஏன் வெறுப்பு ...?

காதல் 
எல்லோருக்கும் வரும் 
எனக்கு போய்விட்டது 

கஸல் 526

-----

காதலும் நீ 
வாழ்க்கையும் நீ 
என்று தான் இருந்தேன் 
இரண்டும் இப்போ இல்லை 

கண்ணுக்குள்.... 
கண்ணீர் வரும் 
நீயும் திரவமாய் 
வருகிறாய் 

இரும்பை தான் 
காந்தம் இணைக்கும் 
மரக்கட்டையை 
இணைக்க சொல்லுகிறாய் 

கஸல் 527

-----

மெழுகு திரியாய் ..
எரிகிறேன் 
நீ 
கை தட்டி நூர்க்கிறாய்...!!!

காதல் பூமியில் இருக்கும் 
காதலர் சிலர் 
வானத்தில் இருப்பார் 

அழுகையில் 
போட்டி போடுகிறாய் 
தோற்றது காதல் 
மறந்து விடாதே ....!!!

கஸல் ;528

-----------

உன்னை கண்டவுடன் ..
என் உயிர் போகிறது
என்னை கண்டவுடன் 
நீ உயிர்க்கிறாய் ...!!!

காதலில் பலதுண்பம் 
அதுதான் காதல் 
வானவில் -நீ ரசிக்கிறாய் 

உன்னை நினைக்கும் ..
நேரமெல்லாம் -ஒரு 
கண் கண்ணீரையும் ...
மறு கண்ணில் நீயும் 
தெரிகிறாய் ....!!!

கஸல் 529

------

காதலிக்க நீ 
தயார் -என்னை 
முற்கம்பிக்குள் 
நிற்க சொல்லுகிறாய் 

நான் உறங்கும் 
நேரம் 
நீ காதல் கீதம் 
பாடுகிறாய் ....!!!

எப்போது காதல் 
வரும் என்று ஏங்கிய நான் 
எப்போது போகும் என்று 
ஆக்கிவிடாதே 

கஸல் 530

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கஜல் கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்

கஸல் கவிதை பற்றிய சிறு விளக்கம்

சமுதாய முன்னேற்றம்