கவிப்புயல் இனியவன் கஸல் 480 - 490

நீ 
எண்ணை
நான் 
தண்ணீர் 
எப்படி காதல் வரும் ...?

நீ விறகாக மட்டும் இரு 
உனக்கும் சேர்த்து நானே 
எரிகிறேன் ....!!!

மின்னியபோது உன் நினைவு 
இப்படித்தான் முதல் முதல் 
நீ சிரித்தபோது -நான் 
கருக்கினேன் ....!!!

கஸல் 481

---------

ஒன்றை இழந்து ஒன்றை 
ஒன்றை பெற்றேன் 
கவிதை வந்தது ...!!!

கண்ணால் பார்த்தேன் 
இதயம் வந்தது -கண்ணீர் 
விட்டேன் கவிதை வந்தது 

உன் 
பெயரை பேனையால் 
தான் எழுதினேன் 
மின்னலாய் தெறிக்கிறதே...?
ஏன் கோபமாய் இருக்கிறாய் ...?

கஸல் 482

-------------

உனக்கு வாழ்க்கை வரும் 
என்றால் நான் வாழ்க்கையை 
இழக்கத்தயார் ....!!!

உன் 
வீட்டில் வந்து நிற்கிறேன்
உள்ளே வா என்று கூப்பிடாமல் 
தயங்குகிறாய் ....!!!

வற்றாத கடல் நீர் 
உன் நினைவுகள் -ஆனால் 
கசக்கிறதே கடல் நீர் 

கஸல் ;483

-------------

உனக்கு என் இதயம் 
உதைப்பந்தாட்ட மைதானம் 
எப்படி வேண்டுமென்றாலும் 
உதை.....!!!

என் தென்றலும் நீ 
சூறாவளியும் நீ 
நினைவுகள் சுனாமி ...!!!

நீ என்னை விட்டு 
யாரிடம் போனாலும் 
உன் காதலன் நான் தான் 

கஸல் ;484

----------

என் இதயத்தில் நுழைந்த 
நீ -ஏன் உன் இதயத்தில் 
நுழைய விடுகிறாயில்லை

எட்டாத பழம் புளிக்கும் 
என்ற சிறுவயது கதை 
நினைவுக்கு வருகிறது 
நம் காதலில் ....!!!

உனக்கு தந்த பூ 
என்னை பார்த்து 
ஏளனம் செய்கிறது ....!!!

கஸல் 485

------------

காதல் வலி என்றால் 
என்ன என்று மனதில் 
கேட்டேன் -பதில் வந்தது 
நீ தான் என்று ....!!!

நான் கடல் நீ 
தோனி -துடுப்பு 
உடைந்த கடல் 
பயணம் ....!!!

காதல் 
தோற்பதில்லை 
காமம் தோற்றால் 
காதல் தோற்றது என்கிறாய் 

கஸல் ;486

------------

விடிய விடிய 
உனக்காக காத்திருந்தேன் 
கனவில் கூட வரவில்லை 

வா 
காதலே இல்லாத 
கிரகத்தில் காதல் 
செய்வோம் -இங்கு 
காதலர்கள் அதிகம் 
உனக்கு இந்த இடம் 
பொருத்தமில்லை 

நான் 
விடுவது கண்ணீர் அல்ல 
கண் முன் நீ தந்த வலி

கஸல் 487

-----------

உன் 
இதயம் பலாபழம் 
முள்ளும் இருக்கிறது 
இனிப்பும் இருக்கிறது ...!!!

என் 
இதயம் ரோஜா 
அழகும் இருக்கிறது 
ஆபத்தும் இருக்கிறது 

காதல் ஒரு கண்ணாடி 
பார்க்க அழகு 
விழுந்தால் முடிவு ...!!!

கஸல் 488

-----------

நீ 
என்னை நினைக்க 
முடியாத படி நான் 
போகப்போகிறேன் 

காலையில் 
சூரிய உதயம் 
தானே வரும் 
நீ 
சந்திரன் போல் 
வந்து விடுகிறாய் ....!!!

நீ விசமாக இருந்தால் 
கூட குடித்து விடுவேன் 
இதய வலிக்கு தண்ணீர் 
தருகிறாய் ....!!!

கஸல் ;489

------------

எனக்கு தெரியும் 
உனக்கு பொருத்தமானவன் 
நான் இல்லை என்று -உனக்கு 
காதல் விளையாட்டு எனக்கு 
நீயே உயிர் ....!!!

புகையிரதத்துக்கு இருபக்கம் 
இயந்திரம் போல் நீயும் 
இருபக்கம் பேசுகிறாய் ...!!!

எனக்கு வவலை என்ன ..?
நீ போகாமல் - உன் மீது 
இருந்த 
காதல் போய் விட்டது ...!!!

கஸல் 490

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கஜல் கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்

கஸல் கவிதை பற்றிய சிறு விளக்கம்

சமுதாய முன்னேற்றம்