கவிப்புயல் இனியவன் கஸல் 131 - 140

நீ என்னோடு ..
நடந்த பாதையை ..
தேடிப்பார்க்கிறேன் ..
எங்கே சென்றது ...?

பட்டாம் பூச்சிக்கு 
மீன் வலை வீசுகிறாய் ..
உன் விருப்பத்தை ...
நிறைவேற்ற ..
பட்டாம் பூச்சி ஆனேன் ....

வானும் மண்ணும் ..
இணைந்திருப்பது போல் ..
நம் காதல் இருக்கிறது ...!!!

கவிப்புயல் இனியவன் 
கஸல் கவிதை 131

****

மல்லிகை பூக்கும் போது ..
வாசனை வருவதுபோல் ..
உன்னை பார்த்த நிமிடம் ..
முதல் காதலித்து விட்டேன் ...

நான் புல்லாங்குழல் ...
நீ அதிலுள்ள ஓட்டை ..
ஊதுகிறேன்... 
ஓசை வரவில்லை ....

மேகத்தில் மழை ..
மேகத்தின் காதல் 
தோல்வியை ..
காட்டுகிறதோ ...!!!

&
கவிப்புயல் இனியவன் 
கஸல் கவிதை 132

---
உன்னில் இருந்து ...
அதிசக்தி வாய்ந்த ..
மின் வந்ததால் ..
செயலிழந்த காதல் ..
மின்குமிழானேன்...

காதலில் வெற்றி ..
பெற்றவன் சொல்கிறேன் ..
காதலில் தோல்விதான் 
அதிகம் ...!!!

காதலில் ..
மௌனம்தான் அழகு ...
கண்ணீர் தான் பன்னீர் ....!!!

&
கவிப்புயல் இனியவன் 
கஸல் கவிதை 133

^^^

நீ 
சிந்திவிடக்கூடாத 
கண்ணீர் -நான் 
சிந்திக்கிறேன் 
கண்ணீர் வருகிறது 

என் வாழ்க்கையில் 
ஏற்பட்ட பெரும் தெருவிபத்து 
உன்னை நான் தெருவில் 
பார்த்தது 

என் தூக்கத்தை 
கனவு கலைக்கிறது 
என் நினைவை 
நீ கலைக்கிறாய் 

கஸல் ;134

^^^
வயலில் புற்கலாக‌
வளர்கின்றன‍
நான் பசுவாக‌ நின்று
மேய்கிறேன்

கண்சிமிட்டும் நேரம்
பார்த்துவந்தாய்
நான் புகைப்படமாக‌
உன்னை வைத்திருக்கிறேன்
இதயத்தில் கண்ணில்

உன்னை இனிபார்க்க‌
துடிக்க‌ மாட்டேன்
என் இதயத்தை பார்ப்பேன்
கஸல் ;135

^^^

மனம் உன் பார்வையால்
உடைந்து சிதறி விட்ட்து 
கவலைப்படவில்லை
உடைத்தது நீ

காதலில் மின் சுழற்சியில்
வருவதுபோல் வருகிறாய்
எப்போது நிரந்தரமாக‌
வரப்போகிறாய் ...?

உன் அன்பு உன்னையும்.....
கடந்து என்மீது பட்டதால்....
இந்தவலி.....!!!

கஸல் ;136

^^^
உள்ளத்தில் காதல்.....!
வேண்டாம் ‍போதும்.....
அவஸ்தை......
தயவு செய்து இன்னும்......
கொஞ்சம் காயப்படுத்து.....
உன்னை நினைத்தபடி வாழ‌....!!!

 ஒவ்வொரு இமை....
சிமிட்டலும் உன்னை....
நான் இழப்பதாகவே....
வருந்துகிறேன்...
கண்சிமிட்டும் ...
நேரம் வராதே....!!!

காதல் என்பது....
உடல் முழுவதும்....
உள்ளமாக‌ மாறும்...
இயற்கை நிகழ்வு.....!!!

கஸல்;137

^^^

இதய முகவரியை ....
தொலைத்த உனக்கு ....
இல்ல முகவரி எப்படி ...?
நினைவுவரும் ....?

நீ விடும் ஒவ்வொரு 
கண்ணீரும் காதலின் 
ஆழமறியாத ஆழத்தை 
அறிய முற்படுகிறது ....!!!

உன்னை சுவாசிக்கிறேன் 
நீ என்னை வாசிக்கிறாய் 
காதல் உணரக்கூடிய 
உணரமுடியாத உறவு ....!!!

கஸல்;138

^^^

பட்டுப்போன மரத்தில் ....
அங்கங்கே பாசி .....
பிடித்திருப்பதுபோல் ....
உன் நினைவுகள் ...
இதயத்தில் ஒட்டி ....
இருக்கத்தான் செய்கிறது ....!!!

ஒவ்வொரு இரவும் ..
எனக்கு வேலை 
உன்னை கனவில் 
தேடுவதும் 
ஏமாறுவதும் தான் ...!!!

நீ மௌனமாக இரு ..
என்னையும் 
மௌனமாக்கிவிட்டு ....
நீ  மௌனமாக இரு .....!!!

கஸல்;139

^^^

இதய பரிமாற்றத்தை 
நீ 
பண்டமாற்றாய்....
நினைத்து விட்டாய் ...!!!

நான் வானம் ..
நீ முகில் ...
நான் நிலையாக ..
நீ அசைந்து கொண்டு...!!!

நான்கவிதையை ..
உன்னைக்கொண்டு ..
எழுதுகிறேன் ..
நீயோ ...
என்னை கொன்று ....
எழுத வைக்கிறாய் ....!!!

&
கவிப்புயல் இனியவன் 
கஸல் கவிதை 140


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கஜல் கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்

கஸல் கவிதை பற்றிய சிறு விளக்கம்

சமுதாய முன்னேற்றம்