கவிப்புயல் இனியவன் கஸல் 201-210

நீ உன் குணத்தை ..
மாற்றப்போவதில்லை ...
மாற்றாவிட்டாலும் ...
பரவாயில்லை ..
புரிந்து கொள் ....!!!

நீ நிலவில் மலர்ந்த ...
செந்தாமரை ...
சந்திரனால் பூத்த ...
சூரிய காந்தி ...!!!

நான் சற்று தூங்கினால் ...
போதும் ...
கனவில் வந்தும் ..
வலிதருகிறாய் ...
நான் தூங்கி பல நாட்கள் ...!!!


&
கவிப்புயல் இனியவன் 
கஸல் கவிதை 201

---
நீயும் நானும் ...
வண்டியின் இரு சக்கரங்கள் ...
ஒன்று உடைந்தால் ...
என்ன ஆகும் ...???

உன்னை பார்த்து பார்த்து ...
என் கண் உன் கண்ணில் ...
குருடாகிவிட்டது ...!!!

காதலுக்கு இதயம் ..
வேண்டும் -அது இல்லாத நீ 
எதற்கு காதலிக்கிறாய் ...???


&
கவிப்புயல் இனியவன் 
கஸல் கவிதை 202


---

ஒவ்வொரு பூவிடம் இருந்து ..
நீ ஒவ்வொரு அழகைப்பேற்றதால் ....
நீ இத்தனை அழகு ...!!!

ஒவ்வொரு முள்ளிடம் இருந்து ..
ஒவ்வொரு வலியை பெற்றதால் ..
தான் நீ இத்தனை வலிதருகிறாய் ...

காதல் என்பது ஒரு வட்டம் ..
தொடங்கிய இடத்தில் தான் ..
முடியும் ...!!!


&
கவிப்புயல் இனியவன் 
கஸல் கவிதை 203


---

உன் ..
நினைவுகளால் ...
மீன் வலைபோல் ..
பின்னப்பட்டிருக்கிறேன் ...
அந்த வலையில் அகப்பட்ட ..
மீன் நான் தான் ....!!!

இரவு வந்தால் ..
சந்தோசம் கனவோடு ...
கதைப்பேன் ...!!!

பூக்களில் சகுனமான பூ 
சகுனமற்ற பூ 
என்று எதுவுமே இல்லை 
உன்னைப்போல் ...!!!


&
கவிப்புயல் இனியவன் 
கஸல் கவிதை 204


---
நீ பஞ்சு நான் நெருப்பு 
பயப்பிடாதே நான் ..
எரிக்கமாட்டேன் ...

உன்னால் ஏற்பட்ட..
ஊமைக்காயம் ...
எனக்கு மிக அதிகம் ...

காதலில் கண் அழவில்லை ...
என்றால் அந்த கண்ணுக்கு ...
அழகில்லை ...!!!

&
கவிப்புயல் இனியவன் 
கஸல் கவிதை 205

---
என் இதயத்தில் -நீ 
பத்திரமாக இருப்பதை ...
என் இதயத்தின் மேல் ..
ஏறிநின்று பார்க்கிறாய் ...
உனக்கே வியப்பாக இருக்கிறதா ..?
உன்னை நான் வைத்திருக்கும் ..
அழகு ...!!!

காதல் 
கரைகாணமுடியாத கப்பல் ...
கறைதட்டும் கப்பல் ....!!!

காதலின் துடுப்பு நான் ...
நீயோ அடிக்கடி ...
நங்கூரத்தை போடுகிறாய் ...!!!


&
கவிப்புயல் இனியவன் 
கஸல் கவிதை 206


---
எனக்கு கவிதை ..
எழுதுவது பிடிக்கும் ..
உனக்கு கவிதை ..
படிக்க பிடிக்கும் ..
நீ வவிதையை மட்டும் ..
காதலிக்கிறாய் ...

கவிதையில் ரசனை ..
உள்ள உனக்கு ஏன்..
என் ரசனை பிடிக்குதில்லை ..???

காதல் ஆண்டவன் ..
போட்ட முடிச்சு ..
யார் மனசில் ..
யாரோ ....?
எவர் பிரிவு எப்பவோ ...???


&
கவிப்புயல் இனியவன் 
கஸல் கவிதை 207


----

நீ என் கண்ணீர் காவியம் ..
நான் உன் கண்ணீர் கதை ..
காவியத்துக்கும் ..
கண்ணீருக்கும் போட்டி ..!!!

உன்னை பார்த்து பார்த்து ..
என்னை மறந்து விட்டேன் ..
என்னை எப்போ பார்ப்பேனோ ..

நீ எதிரில் வந்தால் கூட ..
நான் நம்ப மாட்டேன் ..
கனவாகவே நினைப்பேன் ...


&
கவிப்புயல் இனியவன் 
கஸல் கவிதை 208


---

என்
காலுக்கு...
இதயத்துக்கு ...
வலிதருவத்தற்காவது ...
என்னை காதலி ...

நீ 
என்னை அடையாவிட்டாலும் ..
பரவாயில்லை ..

காதலிப்பதைவிட ..
வலியின் சுகம் தான் ..
காதலில் வலிமையை ..
உணர்த்தும் 


&
கவிப்புயல் இனியவன் 
கஸல் கவிதை 209


---

நான் போகும் பயணம் ...
எது ..? எங்கு ...? என்பதல்ல ..
உன்னோடு பயணம் செய்ய ..
வேண்டும் அது மட்டுமே ...
என் இலக்கு ...!!!

காக்கை கூட்டில் ...
குயிலை அடைகாப்பது போல் ...
உன்னை என் நெஞ்சில் ..
அடைகாக்கிறேன்.....!!!

என் இதயம் பலூன் ..
நீதான் அளவாக ...
ஊதவேண்டும் .....!!!


&
கவிப்புயல் இனியவன் 
கஸல் கவிதை 210

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கஜல் கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்

கஸல் கவிதை பற்றிய சிறு விளக்கம்

சமுதாய முன்னேற்றம்