கே இனியவன் - கஸல் 51 - 60

நீ 
எனது வினா .
நான் 
உன் வினா 
விடைதான் புரியாத 
காதல் ...!!!

நான் நங்கூரம் 
உடைந்த கப்பல் 
நீ 
எங்கே
துறைமுகமாக 
இருக்கிறாய் 

நம் காதல் 
கண்ணீரால் 
கட்டப்பட்ட 
கண்ணீர் மாளிகை 

கே இனியவன் -  கஸல் 51

^^^


காதல் 
ஒரு தேன் கூடு
தேனில் மது இருக்கும் 
நீயும் போதையாகிறாய்..
எனக்கு ..!!!

நீயும் நானும்
காதலில்
சூரிய சந்திரர்கள் ...!!!

என்னை ....
வட்டமிடுகிறாய்....
பருந்துபோல்...
நான் தவிக்கிறேன்....
சிறகுடைந்த பறவையாய் ....!!!

கே இனியவன் - கஸல் 52

^^^

எனக்கு காதலே......
பிடித்தது இல்லை ....
எப்படி -என்......
இதயத்துக்குள்......
வந்தாய் ...?
இதமாக இருக்கிறது ..!!!

என் ....
இதய தடாகத்தில்.....
நீச்சல் பழகுகிறாய்.....
நான்.... 
மூழ்கித்தவிக்கிறேன்.....

நீ 
என்ன பேசினாலும்....
அர்த்தமாக உள்ளது......
நீ 
என் அர்த்தமானவள்
என்பதால் ...!!!

கே இனியவன் - கஸல் 53

^^^

எங்கு ....
பார்த்தாலும் .....
தெரிவது......
உன் முகம் ....!!!

உன் 
அன்பின் ஆழத்தை....
காணமுடியாது...
தெரிந்தும் ..
துடிக்கிறேன் 
ஆழத்தைபார்க்க....!!!

நான் என்பது நீ...
என்று அகராதியில்....
மாற்ற வேண்டும்...
நமக்காக அல்ல....
காதலுக்காக ...!!!

கே இனியவன் - கஸல் 54

^^^

உனக்கு ..
காதலில் மரியாதை
கிடைக்கும் என்றால்
நான் உன்னை விட்டு
விலகவும் தயார் ...

கடலுக்குள்...
எறியப்பட்ட...
கல் நீ.......
எப்படி உன்னை ....
தேடுவது ...?


சிபி மன்னன் ..
தன் உடலை...
புறாவுக்கு சமனாக்கினார்
நீ வந்தால் தான்
நம் காதல் சமனாகும் ..!!! 

கே இனியவன் - கஸல் 55

^^^

உனக்கு....
பயந்து நான்.....
பாதையை....
மாற்றிவிட்டேன்....
வாழ்க்கையை....
மட்டுமல்ல....
தெருவையும் ....!!!

உனக்குஉலகவிருது...
கொடுக்க வேண்டும்....
காதல் ஆடை அழகாக 
அலங்காரத்துக்கு....
அடிக்கடி மாற்றுவதற்கு ...!!!

கண்ணீரில்.....
விளக்கு எரியும்.....
என்னை நினைத்துப்பார் .....
ஒளிதோன்றும் ...!!!

கே இனியவன் - கஸல் 56

^^^

நீ
இலகுவாக....
பிரிந்து சென்றுவிட்டாய்....
நீ அன்பாய் தந்த மலர் ....
அழுகிறது ....!!!!

இதயத்தில் இருந்து ....
பாயப்போகிறேன்....
என்று அடம்பிடிக்கிறாய் ....
பாய்ந்து விடு உயிரே ...
உன் பாதங்கள் கவனம் ....!!! 

வானத்திலும் ஏழுநிறம் ....
நான் விடும் கண்ணீரிலும் ...
ஏழுநிறம் -அவை ....
துன்பங்களின் வர்ணம் ...!!!

கே இனியவன் - கஸல் 57

^^^

இரட்டை இதயம்
ஒரு சுவாசம்.....
ஒரு சுவாசம் -இரட்டை 
உடல் தான் காதல் ...!!!

நீ பின்னப்படும்....
கிடுகு....
நான் குறுக்கும்...
மறுக்குமாக....
பின்னப்படுகிறேன்....
என்னை மீட்டுவிடு ....!!!

நீ 
என்னை ..
கடந்து போனால்
வறண்டுவிடுகிறது
இதயம் ....!!!

கே இனியவன் - கஸல் 58

^^^

நீ
ரோஜாவின் பூவை
மட்டும் ரசிக்கிறாய்
நான் முள்ளையும்
பூவாக ரசிக்கிறேன்...!!!

உன்னுள் நான்...
கிணற்றுத்தவளை...
இதில் என்ன வெட்கம்....?

உச்சி வெயிலில் நிற்பதும்
உன் நினைவில் வாழ்வதும் 
ஒன்றுதான் ...!!!

கே இனியவன் - கஸல் 59

^^^

எனக்கு தெரியும் ..
நீ காதலிக்கவில்லை
என் இதயத்தை ..
களவு செய்யவந்தவள் ...!!!

நீ - பூ
நான் - நார்
எப்போது வரும்
காதல் மாலை....?

பூ வாடும்போது ....
நார் வாடுவதில்லை ...
நாருக்கு தலைக்கனம் ...!!!

கே இனியவன் - கஸல் 60

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கஜல் கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்

கஸல் கவிதை பற்றிய சிறு விளக்கம்

சமுதாய முன்னேற்றம்