கவிப்புயல் இனியவன் கஸல்181-190

காதலில் காத்திருப்பு 
சகஜம் -காத்திருப்பே 
காதலாகிவிட்டது 

காதலில் -கனவு 
பெருக்கல் விதி 
கூட்டல் விதி -நினைவு 
காதலை கழித்தல் 
விதியாக்கிடாதே 

நீ இல்லை என்றால் 
காதல் படும் வேதனையை 
விட -என் கவிதை 
படும் வேதனைதான் 
அதிகம் ...!!!

&
கவிப்புயல் இனியவன் 
கஸல் கவிதை 181

---
என் ஊர் மாரியம்மனுக்கு 
ஆயிரம் கண் பாட்டி ..
சொன்னது ...
உன் இருவிழியும்
 அதற்கு சமன் .....

நங்கூரம் உடைந்த 
கப்பல் தடுமாருவதுபோல் 
நானும் தடுமாறுகிறேன் ...

காதல் எல்லோரிடமும் 
வெற்றி பெறுவதும்மில்லை 
தோற்பதுமில்லை ...
காதலர் தான் பாவம் ...!!!


&
கவிப்புயல் இனியவன் 
கஸல் கவிதை 182

---
காதலில் ...
உனக்கு என்னையும் ..
எனக்கு உன்னையும் ..
பண்டமாற்றைப்போல் ..
பரிமாறிக்கொண்டோம் ...

நான் வானம் ..
நீ முகில் ...
நான் நிலையாக ..
நீ அசைந்து கொண்டு...

நான் கவிதையை ..
உன்னைக்கொண்டு ..
எழுதுகிறேன் ..
நீயோ கவிதையை ..
உன்னைக்கொண்டுதான் ..
எழுதுகிறாய் ...!!!


&
கவிப்புயல் இனியவன் 
கஸல் கவிதை 183


---
சொல்லமுடியாது ..
அது படும் துன்பம் ..
தூக்கத்தை கூட ..
வெறுக்கிறது ...!!!

உனக்கு தெரியாது ..
நீ என்னைவிட ..
அன்பானவள் ...
அழகானவள் ..
நிலையில்லாதவள் ...

நிலாவிடம் ..
கேட்டுப்பார் ...
நாம் சேர்ந்திருந்த ...
நாட்களை கூறும் ...


&
கவிப்புயல் இனியவன் 
கஸல் கவிதை 184


----
எல்லா கப்பல்களும் ...
உன் நினைவுகளை ..
தாங்கிக்கொண்டு ..
இருக்கும் கப்பல் நான் ..

நம் காதலுக்கு ..
கண் தான் விதை ..
தூவும் ...
கண்ணீர் தான் 
உரம் போடும் ...

பூவின் மீது ...
வண்டு இருக்கலாம் 
வெடி குண்டு இருக்கமுடியுமா ...??


&
கவிப்புயல் இனியவன் 
கஸல் கவிதை 185

---
நான் உன் 
தலை விதி ..நீ 
என் தலை எழுத்து ...
நீ என் தலைவிதி ..
நான் உன் எழுத்து ...

மீனுக்கு தண்ணீர் மீது 
தாகம் இல்லை ..!!!
பூவுக்கு காம்பின் மீது 
நம்பிக்கை இல்லை 

உனக்கு பைத்தியம் 
என்கிறாய் கவலைப்படுகிறேன் 
காதல் பைத்தியம் என்று சொல் 
சந்தோசப்படுவேன் ....!!!


&
கவிப்புயல் இனியவன் 
கஸல் கவிதை 186


---

காதல் கானல் நீர் 
தாகத்தையும் தரும் .. 
மோகத்தையும் தரும் ... 

உன் நினைவுகளை 
பதிந்து வைக்கும் .. 
கணணியாகிவிட்டேன் 
தேவையற்றதை ... 
அழிக்கவும் முடியவில்லை .. 

நீ தந்தது 
நினைவு அல்ல 
மரணம் .......!!! 


&
கவிப்புயல் இனியவன் 
கஸல் கவிதை 187
----

நான் தட்டச்சு ...
நீ அதில் எழுத்து ..
நீ விரலால் அச்சடிக்கிறாய் 
நான் வரியாய் வருகிறேன் ...

விலக்கப்பட்ட காதல் 
வீதி இது -ஆம் 
ஒருவழிப்பாதை ...!!!

வேகமாக காதல் 
வாகனத்தை ஒட்டி 
காயப்பட்டவர்கள் 
அதிகம் -அதில் நானும் 
ஒருவன் ....!!!


&
கவிப்புயல் இனியவன் 
கஸல் கவிதை 188

----
நான் உனது பெயரையும் 
நீ எனது பெயரையும் ..
ஆயிரம் முறை கூப்பிட்டேன் 
யாருக்கும் நம்மை தெரியவில்லை 
காதலித்தோம் ஒரே நிமிடத்தில் 
நாம் இருவரும் பிரபல்ஜம் ஆனோம் ...!!!

நீர் மேல் பந்து போல் ...
உன் நினைவுகள் 
ஆடுகிறது ...

உன் கண் அழகானது 
உன் வார்த்தைதான் 
அழகில்லை ...!!!


&
கவிப்புயல் இனியவன் 
கஸல் கவிதை 189

---

காதலை வணங்குகிறேன் 
காதலால் தான் ...
நீ எனக்கு கிடைத்தாய் ..
நீயே என் தெய்வம் ...!!!

என்னை நான் பார்க்க 
உதவும் நிலைக்கண்ணாடி -நீ 

மேகமாக நீ இரு 
நீராவியாக நான் 
வந்து உன்னை 
அடைவேன் .....


&
கவிப்புயல் இனியவன் 
கஸல் கவிதை 190

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கஜல் கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்

கஸல் கவிதை பற்றிய சிறு விளக்கம்

சமுதாய முன்னேற்றம்