கே இனியவன் - கஸல் 31 - 35

இறைவனின் ..
திருவிளையாடலைப்பார்..
உன்னை மதுவாக..
படைத்து -என்னை ..
போதையாக ..
படைத்துவிட்டான்..!!!


உன்னை பார்த்ததை;; 
விட -பார்க்காமல்;; 
இருந்திருந்தால்;; 
மேல் ;;

உன்னை மறக்க...
நினைத்து ...
மறக்க துடித்துக்கொண்டு ..
இருக்கிறேன் ...!!! 



கே இனியவன் -  கஸல் 31

^^^

இறைவனின் ..
திருவிளையாடலைப்பார்..
உன்னை மதுவாக..
படைத்து -என்னை ..
போதையாக ..
படைத்துவிட்டான்..!!!


உன்னை பார்த்ததை;; 
விட -பார்க்காமல்;; 
இருந்திருந்தால்;; 
மேல் ;;

உன்னை மறக்க...
நினைத்து ...
மறக்க துடித்துக்கொண்டு ..
இருக்கிறேன் ...!!! 



கே இனியவன் -  கஸல் 32


^^^

கண் இரண்டு புண் ..
நீதான் என் பார்வை ..
இப்போது என்.. 
கண் இரு கண் ..


காதல் ஒரு ..
புதிய உலகம் ..
படைத்தவனுக்கே... 
புரியாத உலகம் ...


வாழ்க்கையில் வலி 
வேதனை 
காதலில் வலி ..
சாதனை ...



கே இனியவன் -  கஸல் 33


^^^

மழை பெய்கிறது ..
வெளியில் போகாதே ..
மழைத்துளி ..
காயப்படுத்திவிடும் ...


இடிக்கு நான் பயந்தவன் 
அல்ல 
உன் வலியைவிட 
ஒன்றும் கொடுமையானது 
அல்ல 

இறைவன் கூட 
காதலில் 
மயங்கித்தான் 
இருக்கிறான் ..



கே இனியவன் -  கஸல் 34


^^^

உனக்கு 
கண்ணால் கடிதம் 
எழுதி -என் 
கண்ணீரால் 
கையொப்பம் இடுகிறேன் ...

விட்டிலின் 
வாழ்க்கைதான் -என் 
காதல் -உன் வெளிச்சத்தில் 
மயங்கி விட்டேன் 

காக்கையின் கூட்டில் 
அடைகாக்கும் -குயில் 
முட்டைபோல் ..
நான் உன் காதலில் 



கே இனியவன் -  கஸல் 35



கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கஜல் கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்

கஸல் கவிதை பற்றிய சிறு விளக்கம்

சமுதாய முன்னேற்றம்