கவிப்புயல் இனியவன் கஸல் 161-170

உன்னை காதலித்து -நான் 
காணப்போவது சுகமோ 
காதல் சுகமோ -தெரியாது 
நிச்சயம் அழுவேன் 

வசதி படைத்தவன் 
வசதி படைக்காதவன் 
காதலுக்கு தெரிவதில்லையே 

நான் இப்போ பள்ளி வருவது 
உன்னை கிள்ளி செல்லவே 
நீயோ தள்ளி போகிறாய் 


&
கவிப்புயல் இனியவன் 
கஸல் கவிதை 161
---

முத்து குளிப்பது போல் 
உன்னை இத்தனை பேர் 
மத்தியில் தேர்ந்தெடுத்தேன் 
திருடினேன் ...

நீ கையில் தந்த 
முத்தம் தான் -என் 
ஆயுள் ரேகையாக 
இருக்கிறது 

நான் எழுதுவது 
காதலர் கவிதையல்ல 
கண்ணீர் கவிதையும் இல்லை 
காதல் கவிதை 


&
கவிப்புயல் இனியவன் 
கஸல் கவிதை 162
----
என் முகவரியை 
மறந்து -உன் முகவரியை 
எழுதிவிட்டேன் 
தபால் உறையில்...

நீ விடும் ஒவ்வொரு 
கண்ணீரும் காதலின் 
ஆழமறியாத ஆழத்தை 
அறிய முற்படுகிறது 

நான் உன்னை சுவாசிக்கிறேன் 
நீ என்னை வாசிக்கிறாய் 
காதல் உணரக்கூடிய 
உணரமுடியாத உறவு 
&
கவிப்புயல் இனியவன் 
கஸல் கவிதை 163

---
என் அதிஸ்ரம் ..
உன்னை நான் காதலித்தது ..
யார் எழுதிய எழுத்தோ தெரியவில்லை 

இந்த உலகில் எதுவுமே ..
சொந்தமில்லை -என்றது 
உண்மைதான் ...
இருந்த மனசு கூட 
உன்னிடம் வந்துவிட்டதே ...

நீ கண்சிமிட்டும் போதெல்லாம் 
வானத்தில் மின்னல் போல் ...
என் இதயத்தில் அடிக்கிறது 


&
கவிப்புயல் இனியவன் 
கஸல் கவிதை 164

---
நீ ஒன்றும் பாவியுமில்லை 
நான் ஒன்றும் பாதிரியாரும் 
இல்லை .உனக்கு மன்னிப்பு 
தருவதற்கு ...

வேடிக்கைக்கு கூட 
என்னை மறந்துவிடு 
என்று சொல்லிவிடாதே 
நிச்சயமாக நான் மன்னிக்க 
மாட்டேன் ...!!!

காதலில் பெண்களிடம் 
சொல்லி தோற்றவர்கள் 
தான் அதிகம் 


&
கவிப்புயல் இனியவன் 
கஸல் கவிதை 165
--
எழுத்துக்கள் மீது 
இருக்கும் விசிறிகள் 
புள்ளிகள் போல் இருக்கிறாய் 
நான் வெறும் உச்சரிப்புத்தான் 

என் கண்கள் வலியாவதையும் 
அழுவதையும் விரும்புகிறேன் 
அதை தந்தவை நீ என்பதால் 

நான் யாருக்காகவும் 
எதற்காகவும் விட்டு 
கொடுக்கும் பழக்கம் 
இல்லாதவன் -இப்போ 
என்னையே 
விட்டுக்கொடுத்துவிட்டேன் 


&
கவிப்புயல் இனியவன் 
கஸல் கவிதை 166

---

பொருத்தமில்லாதது ..
பொருந்தாது ..
பொருந்தக்கூடியது 
பொருந்தாமல் 
இருக்காது 
நீ -இதில் எது என்று 
தெரியாமல் தவிக்கிறேன் 

தாமைரை இலையில் 
தண்ணி நிற்காது என்கிறாய் 
தாமரையே தண்ணீரில் தான் 
இருக்கிறது 

நீ என் பகலும் இரவும் 
மீண்டும் என்னிடம் நீ 
வரத்தான் வேண்டும் 


&
கவிப்புயல் இனியவன் 
கஸல் கவிதை 167
--

நான் வெறும் கடதாசி ..
நீ தான் அதில் உள்ள ..
கவிதை ..

நான் வெறும் ..
துரிகை -நீ தான் 
அதில் ஓவியம் 

நான் வெறும் உடல்
நீ தான் என் உயிர் 
என்று இருந்தேன் 
நீ பிரியப்போகிறாய் 
என்கிறாயே -என்னை 
பற்றி கொஞ்சமேனும் 
சிந்தித்தாயா ....???


&
கவிப்புயல் இனியவன் 
கஸல் கவிதை 168
--

பட்டுப்போன மரம் ..
என்று தெரியாமல் ..
வண்ணாத்தி பூச்சி ...
அமர்ந்ததுபோல் ...
என் காதல் ...

ஒவ்வொரு இரவும் ..
எனக்கு வேலை 
உன்னை கனவில் 
தேடுவதும் 
ஏமாறுவதும் தான் ...!!!

நீ மௌனமாக இரு ..
என்னையும் 
மௌனமாக்கிவிட்டு -இரு 


&
கவிப்புயல் இனியவன் 
கஸல் கவிதை 169
--

உன்னை பார்த்தபின்பு 
என்னை புரிந்துகொண்டேன் 
 நான் 

எல்லா காவியங்களும் 
காப்பியங்களும் காதால் 
பிரபலமானவை -நம் 
காதலால் நாமும் 
பிரபல்ஜமாவோம் ...

நாடகத்தில் போடும் 
வேசம் போல் -நீ 
நிமிடத்துக்கு நிமிடம் 
எண்ணத்தை மாற்றுகிறாய் ...!!!


&
கவிப்புயல் இனியவன் 
கஸல் கவிதை 170

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கஜல் கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்

கஸல் கவிதை பற்றிய சிறு விளக்கம்

சமுதாய முன்னேற்றம்