கவிப்புயல் இனியவன் கஸல் 171-180

என் இதயம் 
வறண்ட நிலமாக இருந்தது 
உன்னால் வயல் நிலமானேன் ...!!! 

உன்னை நான் நேரில் 
பார்த்ததை விட 
கவிதையில் பார்த்ததே 
அதிகம் 

காதல் என்பது 
கண்ணாடிவீட்டில் 
இருப்பவன் 
இன்னுமொரு 
கண்ணாடி வீட்டுக்கு 
கல் எறிவதுபோல் ...!!! 


&
கவிப்புயல் இனியவன் 
கஸல் கவிதை 171
----

காதலின் பிறப்பிடத்துக்கு ..
சென்று கொண்டிருக்கிறேன் ..
நீயோ ..
திரும்பி வரப்போகிறேன் ..
என்கிறாய் ...!!!

நீ வராவிட்டால் 
எனக்கென்ன -உன் 
நினைவோடு 
போவேன் 
வாழுவேன் 
காதலின் உச்சத்தை 
அடைவேன் ...!!!

காதல் உச்சத்தை தேடி 
அலைந்த மடையர்களில் 
நானும் ஒருவன் .....!!!


&
கவிப்புயல் இனியவன் 
கஸல் கவிதை 172


---
உன் மரமென்னும்...
இதயத்தில் -என் 
எண்ணங்களால்..
கூடு காட்டுகிறேன் ...

நீ என் இதயத்தில் ..
வந்து போவதுதான் ..
என் உயிர் மூச்சு ...

நான் பொறுப்பில்லாதவன் 
பொறுமையில்லாதவன் 
உன்னை கண்டபின் 
நான் மற்றவர்களுக்கு 
வழிகாட்டியாக இருக்கிறேன் ...!!!


&
கவிப்புயல் இனியவன் 
கஸல் கவிதை 173


---


நன்றி உள்ள இதயம் ...
உன்னை கண்டவுடன் ..
காதலித்ததற்கு ...
நன்றி இல்லாத உன் 
இதயம் என்னை 
தட்டிவிட்டது ...

உன் எண்ணங்களால் ,,
சிதைந்து போன என் 
இதயத்தை திருப்பி வந்து 
மீட்பாயா ...???

இன்று நீ வரமாட்டேன் ..
என்று சொல்ல காதலுக்கு 
என்ன விடுமுறை நாளா ..??


&
கவிப்புயல் இனியவன் 
கஸல் கவிதை 174

--
இறைவா என் காதலியை ..
மன்னித்துவிடு ...
அவள் எனக்கு ;;;
வலிதரவேண்டும் 
என்று தருவதில்லை ...

சிறுவயதில் கண்ட கனவில் 
முகம் தெரியாமல் ..
முழித்ததுபோல் ...
உன் நினைவு..
 இடைஇடையே ...
வந்து போகிறது ....

போக்கு வரத்து நெரிசல் 
எனக்கு பிடிக்கும் ..
அதில் தான் உன்னை ..
அதிக நேரம் பார்க்கிறேன் ...!!!


&
கவிப்புயல் இனியவன் 
கஸல் கவிதை 176

---
கண்ணீர் என்னும் நீரால் ...
காதல் என்னும் மரம் ..
வளர்கிறது ....
உதிரும் இலைகள் கூட ..
உன் பெயரையே உச்சரிக்கிறது .....

உன்னை நினைக்கும் போது 
வரும் கண்ணீரை விட 
உன்னை மறக்கும் போது வரும் 
கண்ணீர் குறைவுதான் ...

உன் கண்கள் என்னை 
கடக்கும் போது -நான் 
கல்லறைக்கே சென்றுவிடுகிறேன் ...


&
கவிப்புயல் இனியவன் 
கஸல் கவிதை 177

---

உன் கண் புருவத்தின் ..
ஒவ்வொரு முடியும் ..
எனக்கு ஒவ்வொரு ..
கவிதைகள் ....

உன் கண் இமைகள் ..
ஒவ்வொன்றும் 
கறுப்பு வானவில் ...

கண்ணீரால் -நீ 
தரும் துன்பம் ..
கூட இன்பத்தை ..
தராவிட்டாலும் ..
துன்பத்தில் சுகம் ..
தருகிறது ...!!!


&
கவிப்புயல் இனியவன் 
கஸல் கவிதை 178

----

காதல் வலியால்..
திட்டுகிறேன் 
புலம்புகிறேன் ..
நீ கவிதை என்கிறாய் ...!!!

உலக அதிசய பிறப்பு ..
என் இதயம் உன்னோடு ..
ஒட்டி பிறந்தது ...

இத்தனை அழகோடு ..
பிறந்தாயே உன் வீட்டு 
பூக்களுக்கு கோபம் 
வரவில்லையா ...???


&
கவிப்புயல் இனியவன் 
கஸல் கவிதை 179

----

கோபுர உச்சியில் உள்ள..
கலசம் போல் என் இதயத்தில் ..
இருக்கிறாய் ..

உன்னை மறக்க எவ்வளவோ ..
முயற்சிக்கிறேன் ..
மறதியை மறந்தாலும் 
உன்னை மறக்க முடியவில்லை 

உனக்கு தெரியும் 
நீ 
வெறும் கூடு 
உன் இதயம் 
உயிர் எல்லாம் 
என்னிடம் தானே இருக்கிறது 



&
கவிப்புயல் இனியவன் 
கஸல் கவிதை 180

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கஜல் கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்

கஸல் கவிதை பற்றிய சிறு விளக்கம்

சமுதாய முன்னேற்றம்