கவிப்புயல் இனியவன் கஸல் 221-230

என் இதயக்கப்பல் ..
நீயில்லாமல் ..
உன் நினைவுகளை ..
மட்டும் சுமந்து ..
செல்கிறது .....!!!

சிறுவயதில் ..
பாம்பு கனவு கண்டேன் ...
இப்போது உன்னை காண்கிறேன் ...
வேறுபாடில்லை ...!!!

காதலில் 
உதைப்பந்தாட்டம் ..
உலக வீராங்கனை நீ தான் 


&
கவிப்புயல் இனியவன் 
கஸல் கவிதை 221

---
நீ சிவலிங்க பூ 
அதிகம் மலரமாட்டாய் ...
மதிப்பு அதிகம் ....!!!

உன் சுமையை ..
சேர்த்து சுமந்தாலும் ...
இதயம் இலேசாகத்தான் ..
இருக்கிறது ...!!!

உன் புகைப்படத்தை ..
பார்த்து கண்ணடித்தேன் ..
நீ சிரிக்கவில்லை ...!!!


&
கவிப்புயல் இனியவன் 
கஸல் கவிதை 222

---
உன்னை ..
காண்பது ..
அமாவாசையும் ..
பௌணமியும்...!!!

இரவாகுவதில் ..
சூரியனுக்கு பெருமை ...
இருளை அழிப்பதில் ..
சந்திரனுக்கு ..
பெருமை ....!!!

காதல் அடையில்..
பொரித்தது காதல் கிளி அல்ல ..
காதல் கழுகு ...!!!


&
கவிப்புயல் இனியவன் 
கஸல் கவிதை 223

---
நீ சிரிக்கும் போது ..
தலை சூடய..
நீ மல்லி பூவை விட ..
என் உயிர் சூடய
உன் புன்னகை அழகாகும் ..!!!

நீ என்னை ..
மறுக்கும் போது ...
தலையில் சூடிய ...
மல்லிகை உன்னை ..
பார்த்து சிரிக்கும் ...!!!

பூவுக்கே புரிகிறது ..
பூவின் குணம் ..
ஒரு பூவின் குணத்தை ..
பூதான் அறியுமோ ...?


&
கவிப்புயல் இனியவன் 
கஸல் கவிதை 224

---
நான் விடும் கண்ணீரும் ..
மேகம் விடும் கண்ணீரும் ..
ஒன்று தான் ...!!!

மேகத்துக்கும் ..
முகிலுக்கும் ..
ஏற்பட்ட காதல் ...
தோல்வி ....
மழை ....!!!

உன் கண்கள் 
சூரிய உதயம் ..
நீயோ தூங்கி ....
கொண்டிருக்கிறாய் ...


&
கவிப்புயல் இனியவன் 
கஸல் கவிதை 225


---

காற்றைப்போல் ...
கண்ணில் படாதவளே....
உன்னை உணர்ந்தால் போதும் ...

மழையில் பூத்த ..
காளான் போல் ..
நம்காதல் ...

நீ நிலவு ..
நான் வானம் -இன்று 
அமாவாசை ...!!!


&
கவிப்புயல் இனியவன் 
கஸல் கவிதை 226

----
உள் கண் ..
வெளிக்கண் ..
நீ எந்த கண்ணால் ..
பார்க்கிறாய் சொல் ...!!!

காதலுக்கு ...
கதை தேவையில்லை ...
உன் கண் போதும் ..
பூவாக இருக்கிறாய் ..
புழுவாக பேசுகிறாய் ....!!!

என் இதய அறையில் 
ஒரு அறையை -நீ 
மூடிவிட்டாய் ....!!!

&
கவிப்புயல் இனியவன் 
கஸல் கவிதை 227

---
உன் முத்து பற்கள் ...
மாதுளம்பழ முத்துக்கள் ..
சிரிக்கிறாய் சிவக்கிறது ...!!! 

நீ சிரித்தால்...
பூக்கள் கோபப்படும் ...
தேனீக்கள் பயப்படும் 

தாகமாக நான் ...
தண்ணீராக நீ.. 
என்ன பயன் ..
கடல் நீராக நீ 


&
கவிப்புயல் இனியவன் 
கஸல் கவிதை 228

---
நெருப்பு நீ ..
ஏன் சுடமாட்டேன் ..
என்கிறாய் ...
பனிபோல் சிலுக்கிறாய் ...!!!

நான் உன்னை ..
நினைத்து சிரித்த 
நாட்களைவிட ...
சிலுத்த நாட்களே ..
அதிகம் .....!!!

தேன் கூட்டில் ...
தேனி நான் 
தேன் கூடு நீ 
தேன் எங்கே ....?


&
கவிப்புயல் இனியவன் 
கஸல் கவிதை 229

---
உன்னை பற்றிய ...
அனுமானிஷா...
நினைவுகள் தான் ..
என் கவிதை ...!!!

ஒளியில் சந்தித்தோம் ...
இருட்டில் இருக்கிறோம் ...

என்னிடம் இருந்து ..
எதை வேண்டுமென்றாலும் ..
எடுத்துவிடு ...
காதலை தந்துவிடு ,,
என்று சொல்லமாட்டேன் ..
அது பழைய பஞ்சாங்கம் ...
என்னை விட்டுவிடு ...!!!


&
கவிப்புயல் இனியவன் 
கஸல் கவிதை 230


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கஜல் கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்

கஸல் கவிதை பற்றிய சிறு விளக்கம்

சமுதாய முன்னேற்றம்