கவிப்புயல் இனியவன் கஸல் 211-220

ஊருக்கு புறப்பட்டு ..
விட்டேன் -ஊரே 
நெருங்கி வராதே ...!!!
அவள் நினைவோடு வருகிறேன் ...!!!

காதலின் எந்த கேள்விக்கும் ...
விடையில்லை ...!!!
விடை சொல்லவும்...
யாரும் இல்லை ...!!!

காலையில் பூவாகவும் ..
மாலையில் பூவாகவும் ...
நம் காதல் என்றால் ..
அந்த காதல் எதற்கு ...?


&
கவிப்புயல் இனியவன் 
கஸல் கவிதை 211
---
உன்னை பற்றி கவிதை ..
எழுத பிரபஞ்சமே ...
போதாது ,...!!!

நீ உன்னிடமிருந்து ..
எடுத்துவிட்டாய் ...
என்று உறுதிப்படுத்து ...
நான் உன்னை விட்டு ..
விலகுகிறேன் ....!!!

சம்பல் அரைத்த அம்மியை ..
கழுவினாலும் ...
ஓரத்தில் சில துவல்கள் ..
இருப்பது போல் ...
என் நினைவுகள் உன்னில் ..
ஒட்டி இருக்கும் ...!!!


&
கவிப்புயல் இனியவன் 
கஸல் கவிதை 212

---
நீ ஏன் பகலிலும் ..
இரவிலும் சூரியனாக ...
வாழ்கிறாய் ...?

காற்றைபோல் நீ 
எங்கே இருக்கிறாய் ..?
எங்கே தொடங்குகிறாய் ..?
எங்கே முடிகிறாய் ..?
தெரிவதில்லை ...!!!

எதை கண்ணீரால் ...
எழுதக்கூடாதோ...
அதை கண்ணீரால் ...
எழுதுகிறாய் ...!!!


&
கவிப்புயல் இனியவன் 
கஸல் கவிதை 213

---
கள்ளிச்செடிபோல்...
உனக்கும் மேன்மையில்லை ...
ஆனால் இரக்கம் உண்டு ..
ஈரமிருப்பதால் ....!!!

தூங்கிய பின்பும் ...
பார்க்கும் கண்கள் ...
காதல் கண்கள் மட்டும் தான் ....

உன்னக்காக நான் ...
காத்த்திருப்பதை ..
பார்த்தால் பகலைவிட ...
இரவுதான் அதிகம் ...


&
கவிப்புயல் இனியவன் 
கஸல் கவிதை 214

---
என் இரவுகள் ..
விடியாமல் இருக்க வேண்டும் ..
அப்போதுதான் -நீ தொடர்ந்து 
என்னோடு இருப்பாய் ...!!!

என் காதல் தீப்பெட்டி -நீ 
உரசும் தீக்குச்சி நான் ...!!!

என் உணர்வு ...
அன்பு ...
இன்பம் ...
எல்லாம் நீதான் ...!!!


&
கவிப்புயல் இனியவன் 
கஸல் கவிதை 215

---
நான் எவ்வளவோ..
முயற்சிக்கிறேன் ..
கவிதை எழுதாமல் ..
விடுவோம் என்று ...
முடியாது முடியாது ...
நான் விட்டாலும் ...
கவிதை விடாது ..!!!

கவிதையை ரசிக்கும் நீ 
காதலையும் ரசிக்க பழகு .

காதலில் நான் 
இடது இதய அறை-நீ 
வலது இதய அறை 
எப்படி பிரிந்திருப்பது ...!!!


&
கவிப்புயல் இனியவன் 
கஸல் கவிதை 216

---
நீ யாரோ ..?
நான் யாரோ ..?
இணைத்தது ..
காதலா ..?
காலமா ..?

நீ கனவில் கூட 
வரமுடியாத ..
பாவியாகிவிட்டேனா ..?

நம் காதல் ..
பகலில் நட்சத்திரம் ..
இரவில் வானவில் ..
அருமையான -நம் 
காதல் இல்லையா ..?


&
கவிப்புயல் இனியவன் 
கஸல் கவிதை 217

---
கடல் அலை தன் காதலியை ..
கரையில் வந்து தேடுவது போல் ..
நான் என் இதயத்தில் ...
உன்னை தேடுகிறேன் ...

நீ வரும் போது ..
பெரும் கடல் அலை ...
வருவதாகவே ....
நினைக்கிறேன் ...

உனக்கு தெரியுமா ..?
நீ கண் எறிந்த நாள் தான் ..
என் கலண்டர் நாள் ..
வருடப்பிறப்பு ...!!!


&
கவிப்புயல் இனியவன் 
கஸல் கவிதை 218

---

பூக்கள் வெறுக்கும் ..
பட்டாம் பூச்சிபோல் ...
நான் ஆகிவிட்டேன் ..

நான் கனவில் காண ..
உன் நினைவுகள் 
என்னிடம் இல்லை ..!!!

நான் இடையிடையே ..
பேசுகிறேன் ..
நீ இடையிடையே ..
அழுகிறாய் ...!!!


&
கவிப்புயல் இனியவன் 
கஸல் கவிதை 219
---
காதல் என்னில் ..
நிரம்பி வழிகிறது ...
நீயோ வறண்டிருக்கிறாய் ...!!!

என் இதயத்தில் ..
சிறைவைத்தேன் ...
நீயோ விடச்சொல்லி ..
உண்ணாவிரதம் இருக்கிறாய் ...!!!

நான் ஏக்கத்துடன் ...
பார்க்கிறேன் -நீயோ 
தூக்கத்தில் இருக்கிறாய் ...!!!


&
கவிப்புயல் இனியவன் 
கஸல் கவிதை 220

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கஜல் கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்

கஸல் கவிதை பற்றிய சிறு விளக்கம்

சமுதாய முன்னேற்றம்